கதைகள் உருவான கதை

தக்ஸ்

அமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..
அதில் நானும் கலக்கிறேன்..

இத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....
அதற்கு முதல் பாராட்டுகள்..

பொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..

ஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்
எல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..

கடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..
சுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்!
 
கடற்கரை உரையாடலும் அதன் முடிவும்...... என்னை வியக்க வைத்தன....

தஷ்ணாமூர்த்தி... உனக்கு மிகப்பெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.. (அண்ணாத்தையை மறந்துடாத கண்ணு)
நீ, ஆவி, குமுதம் போன்ற இதழ்களுக்கு அனுப்பு.. அது பலரைச் சென்றடையும்... உன் கதைகளை நிச்சயம் பிரசுரிப்பார்கள்.. தயக்கம் வேண்டாம்.

அமரனுடைய பின்னூட்டத்தை ஆழ்ந்து படித்தாலே போதும்... விளங்கிவிடும்.. (என்னைக் கேட்டால், எளிமையாகத்தானே எழுதியிருக்கிறார்...)

வாழ்த்துக்கள் பையா....

கூடவே எந்தக் கதையைப் பற்றி சொல்கிறாயோ, அதன் இணைப்பை (Link) கொடுத்துவிடு...
 
நன்றி அமரன் & இளசு அண்ணா
உங்களின் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி, நான் அமரன் விமர்சனங்களின் ரசிகன், இதை நான் ஏற்கனவே ஒரு திரியில் சொல்லி இருக்கிறேன், அவரிடமும் சொல்லி இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர்கள் மதியும், அமரனும். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் நான் மறக்க மாட்டேன். அவரிடம் சும்மா வம்பு பண்ண தான் அப்படி போட்டேன். கொஞ்ச நாளாய் இருவரின் வேலை காரணமாய் நெருக்கம் குறைந்து விட்டது அதனால் அதை அடைக்க தான், அவரை வம்புக்கு இழுத்தேன்.
இன்னும் இழுப்பேன். (ஹா ஹா ஹா)
 
நல்ல ஒரு படைப்பாளி,
பல நல்ல படைப்பாளிகளை
உருவாக்க முடியும்...

தன் படைப்புக்கள்
உருவான விதத்தினைப்
எல்லோருடனும் பகிர்வதனால்...

மனதாரப் பாராட்டுகிறேன்..!!
 
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.
 
அருமையான முயற்சி தக்ஸ்.
Making of the movie பார்ப்பது போல் தான் இதுவும். கதைக்கான காரணம் அறிய பலரும் ஆவலுடன் இருப்பார்கள். உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.. மெச்சத்தக்கது.

நான் எழுதியது சொற்பக்கதைகளே... இருப்பினும் அவற்றின் கதைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன் :icon_b:
 
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

தக்க செயல். சபாஷ் மதி!

சிறப்பு வாழ்த்துகள் தக்ஸ்..

திரி வளரட்டும் -- தக்ஸ் -அமரன் அன்பான வம்பாடல் போலவே!:icon_b:
 
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

நன்றி மதி
ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
 
கதை உருவான கதை - மதிய உலா...

இந்தக் கதையில் முக்கால்வாசி விஷயங்கள் உண்மையில் நடந்தவை. சிற்சில தவிர. அதை கதை எழுதுபவருக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டேன். ஹிஹி.. கதையின் ஆரம்பமே மொக்கை. போன வருட ஆரம்பத்தில் இந்தச் சின்ன வயசிலேயே முதுகுவலி வந்தது.:icon_ush: சரி. அதிகமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதாலும் வண்டியோட்டுவதாலும் வருது போல.. சரியாயிடும்னு விட்டுட்டேன். ஒரு வாரம்..பத்து நாள் ஆச்சு. வலி போன மாதிரி தெரியவில்லை. புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். எங்க வேலை செய்றீங்கன்னார். நிற்க வச்சு ரெண்டு தட்டு தட்டினார். அப்புறம் உங்களுக்கு டிஸ்க் ஸ்லிப்பாயிடுச்சு. இனி நீங்க இப்படியே தான் இருக்கணும். நடக்கும் போது பார்த்து நடக்கணும். வண்டி அலுங்காம குலுங்காம ஓட்டணும். அப்படி இப்படின்னு பயமுறுத்திட்டார். வலி குறைய மாத்திரையும் குடுத்தார்.

ஒரு மாதிரி ஷாக்காகி வீட்டுக்கு வந்துட்டேன். அந்த வாரயிறுதியில் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் இருக்கையில் தூங்கிட்டு இருக்கும் போது என் நண்பன் என் மேலே உட்கார்ந்துட்டான். இருந்த வலி, டாக்டர் ஏற்படுத்தின குழப்பம்... எல்லாமா சேர்ந்து வெறியாகி வெளியே போயிட்டேன். அப்படியே உச்சி வெயில்ல அந்த ஏரியாவ சுத்திட்டு பசிக்கவும் வீட்டுக்குத் திரும்பினேன். மனசு கொஞ்சம் தெளிஞ்சிருந்தது.

என்னமோ தெரியல.. இது புது அனுபவமா இருந்தது... சரி எழுதிப்பார்க்கலாம்னு மடிக்கணினியை எடுத்து வச்சிக்கிட்டு அரை மணிநேரத்தில் எழுதினேன். ஒவ்வொரு விஷயமா யோசிச்சு... மனஓட்டங்களை உணர்ந்து.. எழுதினது. எனக்கே தெரியாம தோராயமா எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி அந்தக் கதை அமைஞ்சுடுச்சு.. ஹிஹி.
எழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்.. :lachen001:
 
நன்றி மதி
ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.
 
நன்றி மதி
நம்ம ஆதவா சொன்னது போல கதையின் சுட்டியை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், உங்களின் கதையை திரும்ப வாசிக்க பலர் ஆவலாக இருப்பார்கள்
 
சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.

ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............
 
ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............
செயல் புரிந்தது மட்டும் தான் நான்.. ஹிஹி.. டீயெல்லாம் வேண்டாம்... சில்லுனு ஏதாச்சும் சொல்லுங்க...

நீங்க சொன்னமாதிரி லிங்க் குடுத்தாச்சு.
 
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
 
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
தங்கள் அன்புக்கு நன்றி இளசு. தற்சமயம் சென்னையிலேயா?
இணையத்தில் அதைப்பற்றி நிறைய படித்து, dehydration- தான் முக்கிய காரணமென்றறிந்தேன். அப்புறம் யோகா. தற்சமயம் நலம்..
 
நலமறிந்து மகிழ்கிறேன் மதி..
நான் சென்னையில் இல்லை..
என் நண்பர் நல்லமுறையில் இதுபோன்ற உபாதைகளுக்குத் தீர்வளிப்பவர் சென்னையில் இருக்கிறார். அவரைப் பார்க்க வழி செய்ய உத்தேசித்திருந்தேன்..

யோகப்பயிற்சியை தொடர்ந்தாலே, இவ்வலி மீளவராமால் காக்கலாம்..
 
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..

இளசு அண்ணா இப்போ நீங்க சென்னையிலா இருக்கீங்க????????????????????
 
இல்லை தக்ஸ்..

இருந்தால் இப்படி உன்னுடன் கண்ணாமூச்சி ஆடுவேனா?

சந்திப்போம் அடுத்த பயணத்தில் - எல்லாம் தலை செயல்!
 
அன்பு அமரன்
முன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா?, புகழ்கிறீர்களா?, கிண்டல் பண்ணிறீங்களா? இல்லை தப்பை சுட்டிகாட்டிறீங்களா? சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.

சந்தடி சாக்கில உன்னை தெய்வமாக்கி என்னை பக்தன் ஆக்கிட்டாய். பலே பலே.. உன் கதைகளைப் பொறுத்தவரை நான் பக்தனே. அதிலும் தேங்காய் உடைத்தால் பொறுக்கிக் கடிக்கும் அளவுக்கு தீவிர பக்தன். அந்தளவுக்கு கதைகளில் பல்வகை நர்த்தனம் புரிகிறாய். இதைத்தான் சொல்ல வந்தேன்பா.

(அடுத்து என்ன கற்பூரமா:))
 
Back
Top