அயல்பு நடவடிக்கை (18+)

ஆதவா

New member
paranormal_activity_02.jpg


அமானுஷ்யமற்ற சாதாரண வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். தீடீரென உங்கள் இரவுகள், உங்களுக்கேயுண்டான இரவுகள் அசாதாரணமாகிவிட்டால் உங்களால் என்ன செய்யமுடியும்? அதனோடு போராடுவதைத் தவிர? இரவு எப்பொழுதும் தன் கண்ணை மூடியிருப்பதால் வெளிச்சப் பூச்சிகளான நமக்கு இரவைக் கண்டதும் பயமாகிவிடுகிறது. இருட்டுக்குள் பேய்களும் ஆவிகளும் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று தோணுகிறது. ஒரு அமானுஷ்ய சக்தி நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்று வீணாக யோசிக்கிறீர்கள். உண்மை அதுவல்ல. ஆனால் அது உண்மையானால்?

மிக்காவுக்கும் கெய்ட்டிக்கும் அப்படித்தான் நடந்தது. இன்னும் சொல்லப் போனால் கெய்ட்டிக்குத்தான் தானொரு சக்தியால் சூழப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு சிறுவயதிலிருந்தே தோன்றியிருக்கிறது. அறிவியல்படி இதனை மெண்டலி டிஸ்ஸார்டர் (ஒழுங்கற்ற நடவடிக்கை) என்று சொல்லலாம். அறிவியல் சாராத அயல்புக்கு (Paranormal) எந்த மருத்துவம் இருக்கிறது? கெய்ட்டியின் எட்டுவயதில் ஆரம்பித்த அந்த அமானுஷ்யம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பின் மிக்காவை காதல் செய்து தனியாக ஒரு வீட்டில் குடி போகிறார்கள். மிக்காவிடம் தன்னைப் பற்றி சொல்லுகிறாள். ஆனால் மிக்கா ஒரு கேமரா பிரியன், அவனது அழகு காதலியை படம்பிடிக்கிறான்... ஒருமணி நேரம் இரண்டு மணி நேரமல்ல, நாள் முழுக்கவும். அவளைச் சுற்றி வரும் அமானுஷ்யத்தை அவனது கேமரா ஒவ்வொரு இரவிலும் சொல்லிவிடுகிறது. ஆனால் அந்த அமானுஷ்யம் அருவமாக இருக்கிறது. அந்த வீட்டில் இரவு முழுக்க அயல்பு சக்திகள் நிறைந்திருப்பதாக உணரும் மிக்காவும் கெய்ட்டியும் ஒரு ஹோட்டலில் தங்கிவிட முடிவு செய்து தயாராகிறார்கள். ஆனால் தன்னைச் சூழ்ந்திருக்கும் சக்தியின் ஆக்கிரமிப்பால் கெய்ட்டி வராமல் போகவே, அந்த இரவு என்னானது என்பதுதான் முடிவு.

Paranormal Activity என்ற இப்படம் 2007 ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம். சாதாரண வீடியோ கேமராவில் படம் பிடிக்கப்பட்டு, இந்திய பணத்தில் சுமார் 70000 ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். நம்புவதற்கு ஆச்சரியமான விஷயம் இது. இரண்டே நடிகர்கள் (மற்றும் இரண்டு பேர் இரண்டு காட்சிகள் மட்டுமே) ஒரு வீடு மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. படத்தின் உண்மைத் தன்மைக்காக டாகுமெண்டரி முறையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் படத்தில் இசைக்கு வேலையே இல்லை, ஒரு திகில் படத்திற்குண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாமல் செல்கிறது. படம் முழுக்க பேசப்படும் வசனங்கள் மிக இயல்பாக இருக்கிறது. கெய்ட்டி, மிக்காவோடு இரவு மட்டும் வாழும் அந்த இன்னொரு அருவம் என்ன எனும் சிந்தனை படத்தின் கடைசி வரையிலும் நம்மை உறையவைத்து கொண்டுவந்துவிடுகிறது. படம் பார்த்த இரவு சற்று பயத்தோடுதான் கழிந்தது என்றால் படத்தின் வீரியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

நமக்கு மீறிய சக்தி உண்டு என்று சொல்லும் நாம், அந்த சக்தி நம் முன்னே நின்றால் நாம் வணங்கப் போவதில்லை, மாறாக பயந்துதான் போவோம். பயம் என்பது கோழைத்தனமானதல்ல, ஆனால் பயமும் கோழைத்தனமானதுதான். இருட்டு, நிலவு, அதீதி (Mutant) அவ்வளவு ஏன், சிலசமயம் நம் நிழல்கள் கூட பயத்தின் அடையாளங்களே. நான் சிறுவயதில் அப்படிப்பட்ட அமானுஷ்யங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அதை முன்பே இங்கே எழுதியிருக்கிறேன். ஆனால் பின்நாட்களில் அவை எதுவும் என்னைத் தொடர்ந்ததில்லை. உலகம் முழுக்க இப்படிப்பட்ட மாயசக்திகள் இருப்பதாக உணரும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பயத்தை படம் பிடித்தது போல இருந்தது Paranormal Activity. இரவில், தனிமையில், அதிரும் ஒலியமைப்பில் ஒருநாள் கண்டுவிட்டு கூறுங்கள் அந்த இரவில் நீங்கள் பட்ட அவஸ்தைகளை...
 
நல்ல விமர்சனம்.. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் இந்த படத்தை எங்கே தேடுவது.? அதையும் நீங்களே சொல்லி விடுங்களேன்.
 
நல்ல விமர்சனம்.. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் இந்த படத்தை எங்கே தேடுவது.? அதையும் நீங்களே சொல்லி விடுங்களேன்.

தனிமடலில் தந்திருக்கிறேன். பாருங்களேன்..
 
Last edited:
அப்படியே அந்த தனிமடலை நம்ம பெயருக்கும் "போர்வார்ட்" செய்துவிடுங்கள் மாண்பு மிகு பொறுப்பாளர் அவர்களே.............

அருமையான விமர்சனம்! உண்மையாகவே திரைப்படத்தை பார்க்க தோன்றுகிறது
 
உங்களது விமர்சனம் மூலம் படம் பார்க்க தூண்டுகிறது. பார்த்துவிடவேண்டியது தான்.
 
இப்படிப்பட்ட படங்களும் வருகிரது என்பது உங்களது இந்த விமர்சனத்தை படித்தவுடன் தான் தெரிகிரது... இனி இந்த படத்தையும் பார்க்க முயல்கிறேன்
 
அப்படியே அந்த தனிமடலை நம்ம பெயருக்கும் "போர்வார்ட்" செய்துவிடுங்கள் மாண்பு மிகு பொறுப்பாளர் அவர்களே.............

அருமையான விமர்சனம்! உண்மையாகவே திரைப்படத்தை பார்க்க தோன்றுகிறது

அனுப்பிவிட்டேன் நாரதரே, இந்த மாண்பிகுவும், பொறுப்பாளரும் தான் ஒருமாதிரியாக இருக்கிறது.

உங்களது விமர்சனம் மூலம் படம் பார்க்க தூண்டுகிறது. பார்த்துவிடவேண்டியது தான்.
பார்த்துவிடுங்கள் அன்பு. :icon_b:

இப்படிப்பட்ட படங்களும் வருகிரது என்பது உங்களது இந்த விமர்சனத்தை படித்தவுடன் தான் தெரிகிரது... இனி இந்த படத்தையும் பார்க்க முயல்கிறேன்

இதைப் போல நிறைய படங்கள் விட்டுப் போகின்றன. நல்ல வித்தியாசமான படங்களை மட்டும் விமர்சனம் தர முயலுகிறேன்.
 
விமர்சனத்துக்கு நன்றி ஆதவா, அயல்பு என்ப்து சரியான் தமிழீடு தானோ ?
 
Last edited:
விமர்சனத்துக்கு நன்றி ஆதவா, அயல்பு என்ப்து சரியான் தமிழீடு தானோ ?

சரியாக இருக்கலாம். Normal என்பதற்கு இயல்பு அல்லது சாதாரணம் என்கிறோம். Abnormal என்றால் அசாதாரணம் என்கிறோம். அப்போ இயல்பு அஇயல்பு என்க முடியாது தானே... அயல்பு சரி.

ஆனால் இங்கு paranormal என்பது extream normal நிலையை குறிக்கிறது. abnormal இலும் அதிகம் எனலாம். ஆனால் தமிழில் வார்த்தை??? எல்லை கடந்த சாதாரணம் எனலாமா???. மருத்துவத்தில் ஏதாவது ஒரு வியாதி para stage என்றால் கிட்டத்தட்ட இறப்புக்கு அண்மையில் இருக்கிறார் என்பார்கள். ஏனென்றால் முன்பொருமுறை எனது தந்தைக்கு மலேரியாவுக்கு வேறு ஒரு மருந்தை மாற்றிக்கொடுத்து அது parastage ற்கு சென்றது. அவரை காப்பாற்ற பட்ட பாடு... இளநீர் ஆரஞ்சு என்று கொடுத்து மருந்தின் செறிவை குறைத்து பின் மலேரியாவுக்கு வைத்தியம் செய்யப்பட்டது.

அயல்பு நன்றாகவே உள்ளது. கூகிளில் தேடினேன். இரண்டு இடங்களில் தான் கண்டுபிடித்தது. ஒன்று ஆதவனின் இந்த திரி. மற்றது நூலகம் என்ற ஒரு இணையத்தில் உள்ள பதிவு.....

அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையில் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் அயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.
 
புரிகிறது ரசிகன், ஆதவன் வந்து என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம் :)
 
இந்தப்படத்தைப் பற்றி ஆனந்தவிகடனில் ஒருமுறை படித்திருக்கிறேன். ஆதவாவின் விமர்சனம் வழக்கம்போலவே மிக அருமை.

குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானப் படமென்று இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்தமுறை ஊருக்குப் போனதும் பார்க்கவேண்டும்(ஆதவா தனிமடல் அனுப்புவாரென்ற நம்பிக்கையில்தான்....ஹி....ஹி....!!):)
 
இந்த படத்தின் விளம்பரமே வித்தியாசமாக You Tube-ல் வெளியானதாக எனக்கு படித்த நினைவு.
படத்தின் சுட்டியை தனிமடலுக்கு அனுப்புவீர்களா?.
 
ஆமா.. நான் கூட பார்த்துட்டேன் தல..ஒரு பக்கமா தலைவலி வந்ததுதான் மிச்சம்..
 
நல்லதோர் விமர்சனம் ஆதவா, சரி அதிருக்கட்டும் நம்ம ஆதவா எப்படி 18+ படங்களாவே பார்க்கலாம்...!!??? :D:D
 
நல்லதோர் விமர்சனம் ஆதவா, சரி அதிருக்கட்டும் நம்ம ஆதவா எப்படி 18+ படங்களாவே பார்க்கலாம்...!!??? :D:D

இது எல்லாம் 81+ ஆனதுக்கு அப்புறம் பாக்க முடியாது இல்ல .. அதான்
 
இந்த படம் பார்க்க ஆரம்பித்து 10 நிமிசத்திலையே நிறுத்திட்டேன்.... இதே போல cloverfield என்று ஒரு படம் .. அதுவும் பிடிக்கலை, வெறும் காமிராவில் எடுத்து .. அதை குலுக்கு குலுக்கி .. ஆளை விடுங்கப்பா...

ஆனா விமர்சனம் முழுசா வாசித்தேன்...:D
 
அன்பு ஆதவா,

படம் எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றி படித்த போது பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ஆனால் படத்தின் கதை அந்த ஆசையை குறைத்து விட்டது. மாறுபட்ட படங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மனமார்ந்த நன்றி.

விமர்சனத்தில் "பயம் என்பது கோழைத்தனமானதல்ல, ஆனால் பயமும் கோழைத்தனமானதுதான்" என்று வந்திருக்கிறது - பாருங்கள்.
 
புரிகிறது ரசிகன், ஆதவன் வந்து என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம் :)

அன்பு ரசிகனோட கருத்துக்கு முழுவதுமாக உடன்படுகிறேன். நான் சொல்ல நினைத்தது அதுதான்.
நன்றி அன்பு.

நல்லதோர் விமர்சனம் ஆதவா, சரி அதிருக்கட்டும் நம்ம ஆதவா எப்படி 18+ படங்களாவே பார்க்கலாம்...!!??? :D:D

நீங்க வேற... இதுவாவது பரவாயில்லை.... (ஒண்ணுமேயில்ல) இன்னும் Anti Christ, Dead Girl, Teeth நு நிறைய படங்கள் பார்த்தேன்... என்னைமாதிரி சின்னப்பசங்க பார்க்கக் கூடாததெல்லாம் வெச்சு படம் எடுக்கறாங்கப்பா....

இந்த படம் பார்க்க ஆரம்பித்து 10 நிமிசத்திலையே நிறுத்திட்டேன்.... இதே போல cloverfield என்று ஒரு படம் .. அதுவும் பிடிக்கலை, வெறும் காமிராவில் எடுத்து .. அதை குலுக்கு குலுக்கி .. ஆளை விடுங்கப்பா...

ஆனா விமர்சனம் முழுசா வாசித்தேன்...:D

இந்த படத்தை ஒருவருசமா நான் பார்க்கவேயில்லை பென்ஸு அண்ணா. ஆனால் நிதானமா பார்த்தால் மிரட்டுது படம். டாக்குமெண்டரி ஸ்டைல்ல படம் எடுப்பது கொஞ்சம் நம்பகத் தன்மைக்காக.. District 9 பார்த்தீங்கன்னா பாதிபடம் பேட்டிகளாலேயே ஓடும்.. ஒரு புதுவகையான உத்திதான் இது. அப்பறம்..... அதென்னங்கண்னா வெறும் காமிராவில் எடுக்கிறது??? வேற எதில எடுப்பாங்களாம்.... ஹாஹா..... :lachen001:

அன்பு ஆதவா,

படம் எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றி படித்த போது பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ஆனால் படத்தின் கதை அந்த ஆசையை குறைத்து விட்டது. மாறுபட்ட படங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மனமார்ந்த நன்றி.

விமர்சனத்தில் "பயம் என்பது கோழைத்தனமானதல்ல, ஆனால் பயமும் கோழைத்தனமானதுதான்" என்று வந்திருக்கிறது - பாருங்கள்.

எல்லா பேய் கதைகளும் 0 வில் ஆரம்பித்து 0 வில் முடியும் கதைகள்தான் அண்ணா. ஆனால் அவற்றின் திரைக்கதைகள்தான் நம்மை திகிலடையச் செய்வன... கண்டிப்பாகப் பாருங்கள்.
 
ஆதவா அண்ணா..
இந்த படம் நானும் பார்த்துள்ளேன்..நல்ல படம்..
இந்த படம் 2007ல் எடுத்திருந்தாலும் படத்தை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இரண்டு வருடங்கள் கழித்து திரு.ஸ்பீல்பெர்க் பரிந்துரைத்து பின்பு 2009ல் வெளிவந்து வசூலை வாரி குவித்துள்ளது...

தற்பொழுது இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது...
 
Back
Top