ஆதி
New member
சாருவின் மனநிலையில் இப்படம் அவருக்கு நல்ல படமாகத் தெரியவில்லை போலும். சாருவின் விமர்சனத்தால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை.
சரியா சொன்னீங்க தங்கவேல் அண்ணா
சாருவின் மனநிலையில் இப்படம் அவருக்கு நல்ல படமாகத் தெரியவில்லை போலும். சாருவின் விமர்சனத்தால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை.
நானும் அவருடைய வலைத்தளத்தில் அவர் எழுதியிருந்த விமர்சனத்தை படித்தேன்..
பாதியிலேயே எழுந்து வந்து விட்டதாக எழுதியிருந்தார். பாதியிலேயே எழுந்து வந்ததற்கான வலுவான காரணம் எதுவும் அவர் குறிப்பிடவில்லை. எதார்த்தம் என்பதை இந்த இயக்குனர் கையாண்ட விதத்தையும் சாடி இருக்கிறார்.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் வந்த ரன் படத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அந்த படம் அளவுக்கு இந்தப்படம் விறுவிறுப்பாக இல்லையாம்.. அதனால் இந்தப்படம் குப்பை என்றும் விமர்சித்திருக்கிறார்.
ரன் படத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அதே சமயம், அந்த மசாலா கதையை எடுத்த விதத்தையும், இந்த இயல்பான படத்தை எடுத்த விதத்தையும் ஒப்பிட்டு எழுதுவது தன்னை ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்பவருக்கு அழகல்ல. இந்த படத்தை வேறெப்படி எடுக்க முடியும் ??
எந்த ஒரு வலுவான காரணம் இல்லாமல் ஒரு தரமான படத்தை விமர்சிப்பதை , விளம்பரத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக என்று எடுத்துக்கொள்வது??
ஒன்று செய்வோம்... இந்த படத்தை எப்படி எடுப்பது என்பதை அவரே சொல்லட்டும் அல்லது எடுத்துக்காட்டடும்..
படத்தை பார்க்கும்போதோ அல்லது விமர்சனம் எழுதும்போதோ நிலையில் இல்லாமல் இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது...
அன்புள்ள ஆதனுக்கு….,
நீ சொன்ன சாரு சார் விமர்சனத்தை படித்தேன்… படிக்க படிக்க இதழோரம் புன்னகைதான் அரும்புகிறது..!! அவர் எங்கே படத்தை பற்றி விமர்சித்திருக்கிறார்… முழுக்க முழுக்க தன்னை பற்றியே அல்லவா சிலாகித்திருக்கிறார்…!! அந்த தகவலை நீ இங்கே மன்றத்தில் பகிர்ந்திருப்பது அவருக்கு ஒரு விளம்பர முகவராக நீ செயல்படுவது போன்ற தோற்றத்தைதான் ஏற்படுத்துகிறது… இதுபற்றி சற்று சிந்தித்தால் நலம் நண்பனே..!!
கீழை நாடானின் கருத்துரை, கனக்கச்சிதம்..!