mukilan
New member
படித்ததில் பிடித்தது
இனிய சொந்தங்களுக்கு வணக்கம். மன்றத்தில் நாம் தமிழால் இணைந்தோம். ஒவ்வொருவரின் படைப்புகளையும் மற்றவர்களிடம் காட்டி அவர்களின் விமர்சன உளிகளால் அழகிய சிலைகளாய் சமைத்தோம்.மன்றமானது தமிழ் பழகுதளமாய், அறியாதது அறியத்தரும் களமாய், நல்ல நட்பின் இல்லமாய் விளங்கி வருகிறது.
தமிழ் பயின்றதோடு மட்டுமல்லாமல் எங்கேனும் நாம் கண்ணுறும் அழகிய படைப்புகளை மன்றத்தின் மற்ற நண்பர்களுக்கு அறியத்தருவதிலும் மனம் மகிழ்ந்தோம். நாம் படித்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பண்பு மிக உயர்ந்தது. :icon_b:
ஆனால் படைப்பாளிக்கு நன்றி சொல்லாமலோ, மூலத்தை குறிப்பிடாமலோ இங்கே பதித்தல் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போன்றது அல்லவா? நமது படைப்பை யாரேனும் அவ்வாறு செய்தால் நம் மனம் எத்தகைய துன்பம் அடையும்.
எனவே இனிமேல் நம்மில் எவரேனும் அடுத்தவர் படைப்பை பகிர்ந்து கொள்ள நினைக்கையில் அதன் படைப்பாளி யார், அந்தப் பதிப்பு எங்கே கண்ணுறப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு படித்ததில் பிடித்தது பகுதியில் மட்டும் பதியுங்கள். வேறெந்தப் பகுதியிலும் பதியவேண்டாம் என மன்ற நிர்வாகம் சார்பில் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
படித்ததில் பிடித்ததில் இடம்பெறவேண்டிவை:
பிறதளங்களில் வேறொருவர் பதிந்துள்ள படைப்புகள்- இவை கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள், விமர்சனங்கள்,
செய்திகள் (அப்படியே வெட்டி ஒட்டுவதானாலும், வெறும் தட்டச்சு செய்வதானாலும்)
இது படைப்பாளிகட்கு மரியாதை செய்வதற்கும் , காப்புரிமை மீறல் மற்றும் அறிவுத்திருட்டு போன்றவற்றிற்கு மன்றம் ஒரு களமாய் அமைவதைத் தடுப்பதற்கும் உங்களிடம் வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.
அதிகமாகப் படையுங்கள், நேர்மையுடன் பகிருங்கள்.
இனிய சொந்தங்களுக்கு வணக்கம். மன்றத்தில் நாம் தமிழால் இணைந்தோம். ஒவ்வொருவரின் படைப்புகளையும் மற்றவர்களிடம் காட்டி அவர்களின் விமர்சன உளிகளால் அழகிய சிலைகளாய் சமைத்தோம்.மன்றமானது தமிழ் பழகுதளமாய், அறியாதது அறியத்தரும் களமாய், நல்ல நட்பின் இல்லமாய் விளங்கி வருகிறது.
தமிழ் பயின்றதோடு மட்டுமல்லாமல் எங்கேனும் நாம் கண்ணுறும் அழகிய படைப்புகளை மன்றத்தின் மற்ற நண்பர்களுக்கு அறியத்தருவதிலும் மனம் மகிழ்ந்தோம். நாம் படித்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பண்பு மிக உயர்ந்தது. :icon_b:
ஆனால் படைப்பாளிக்கு நன்றி சொல்லாமலோ, மூலத்தை குறிப்பிடாமலோ இங்கே பதித்தல் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போன்றது அல்லவா? நமது படைப்பை யாரேனும் அவ்வாறு செய்தால் நம் மனம் எத்தகைய துன்பம் அடையும்.
எனவே இனிமேல் நம்மில் எவரேனும் அடுத்தவர் படைப்பை பகிர்ந்து கொள்ள நினைக்கையில் அதன் படைப்பாளி யார், அந்தப் பதிப்பு எங்கே கண்ணுறப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு படித்ததில் பிடித்தது பகுதியில் மட்டும் பதியுங்கள். வேறெந்தப் பகுதியிலும் பதியவேண்டாம் என மன்ற நிர்வாகம் சார்பில் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
படித்ததில் பிடித்ததில் இடம்பெறவேண்டிவை:
பிறதளங்களில் வேறொருவர் பதிந்துள்ள படைப்புகள்- இவை கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள், விமர்சனங்கள்,
செய்திகள் (அப்படியே வெட்டி ஒட்டுவதானாலும், வெறும் தட்டச்சு செய்வதானாலும்)
இது படைப்பாளிகட்கு மரியாதை செய்வதற்கும் , காப்புரிமை மீறல் மற்றும் அறிவுத்திருட்டு போன்றவற்றிற்கு மன்றம் ஒரு களமாய் அமைவதைத் தடுப்பதற்கும் உங்களிடம் வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.
அதிகமாகப் படையுங்கள், நேர்மையுடன் பகிருங்கள்.