ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்!

ராஜா

New member
lrg-385-olympic_logo_beijing_2008.gif


உலக அமைதியை வலியுறுத்தியும் நல்லொழுக்கத்தை வற்புறுத்தியும் மக்களை ஒன்றிணைக்க ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடம் கிரீஸ். முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடந்ததும் ஏதென்ஸில்தான். அது 1896 இல் தொடங்கப்பட்டது.

பெய்ஜிங் 2008 29 ஆவது ஒலிம்பியாட்! இந்த சின்னத்தில் தடகள "போஸ்' " ஒன்று இடம் பெற்றுள்ளது.

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருதப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.

உலகின் பெரும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்ஸ் துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பெய்ஜிங் வரலாறு காணாத உற்சாகமும், விழாக்கோலமும் பூண்டுள்ளது.

இதுநாள் வரை ஒலிம்பிக்கில் அமெரிக்காவே அதிக அளவு பதக்கங்களை குவித்து தனிக்காட்டு ராஜாவாக விளங்கி வந்தது. சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு சரியான சவாலாக விளங்கினாலும், அது சிதறுண்ட பிறகு போட்டியே இல்லாமல் இருந்த தனிக்காட்டு ராஜாவுக்கு, "தண்ணி காட்டும் ராஜா"வாக மக்கள் சீனக் குடியரசு உருவெடுத்துள்ளது. கடந்த ஏதென்ஸ் ஒலிம்பியாடில் இருநாடுகளுக்கும் இடையே இருந்த பதக்க வேறுபாடு மிகக் குறைவுதான்.

இம்முறை தன் சொந்த மண்ணில் தன்னம்பிக்கையோடு ஒலிம்பிக்கை எதிர்கொள்ளும் சீனாவை மிஞ்ச அமெரிக்கா தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும்..!
 
Last edited:
இந்தியாவின் பதக்க நம்பிக்கைகள்!

img1080729057_1_1.jpg

சீனத் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 8ஆம் தேதி துவங்கவுள்ள 29வது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணி வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் தங்களுக்கு நிச்சயம் உள்ளது என்று கூறியுருப்பது நம்பிக்கையையும் எதிர்பார்பையும் உருவாக்கியுள்ளது.

img1080729057_1_2.jpg

உலக சாம்பியன் பட்டம் வென்ற டோலா பானர்ஜி!


கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் நடந்த மகளிர் வில் வித்தைப் போட்டியில் தனி நபர் ‘ரீகர்*வ்’ பிரிவில் கடுமையான போட்டிக்கு இடையே டோலா பானர்ஜி தங்கம் வென்று உலக வாகையர் பட்டத்தைப் பெற்றார்.

இப்போட்டிகள் உலகின் சில நாடுகளே கலந்துகொண்டு அதில் போட்டிகள் குறைவாக இருந்து டோலா ஜெயித்துவிடவில்லை. மாறாக, துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவில் துவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்து, இறுதிப் போட்டிகள் துபாயில் நடந்தன.

இதில்தான் டோலா பானர்ஜி அரை இறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108 - 106 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதிபெற்று, அதில் கொரிய வீராங்கனை யூன் யங் சோய்யின் கடும் சவாலை எதிர்கொண்டு 110 -109 என்று புள்ளிகள் கணக்கில் வென்று உலக வாகையர் பட்டத்தை வென்றார்.

தங்கம் வென்றபின் செய்தியாளர்களிடம் பேசிய டோலா, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வேன் என்று அறிவித்தார். எனவே, இந்தியாவின் முதல் தங்க வாய்ப்பாக டோலா செல்கிறார்.
____________________________________________________________________

img1080729057_1_3.jpg

துப்பாக்கிச் சுடுதலில் அசரவைத்த மனாவ்ஜித் சிங்!

2004ஆம் ஆண்டு ஏதன்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தினார் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர். அத்தோடு அந்த பாரம்பரியம் முடியவில்லை என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார் மனாவ்ஜித் சிங் சாந்து.

2006ஆம் ஆண்டு ஜாக்ரெப் நகரில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் டிராப் சூட்டிங் பிரிவில் 150 புள்ளிகளுக்கு 143 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்றார் மனாவ்ஜித்.

அதுமட்டுமின்றி, அணிப்போட்டியில் மனாவ்ஜித், மான்செர் சிங், அன்வர் சுல்தான் ஆகியோர் இந்தியாவிற்கு வெள்ளி வென்று பெருமை சேர்த்தனர்.

இவர்களோடு அஞ்சலி பகவத் உள்ளிட்ட திறமை வாய்ந்த ஒரு அணி செல்கிறது. எனவே இந்தியாவின் பதக்க வாய்ப்பு பீஜிங்கில் மேலும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
 
img1080729057_2_1.jpg

குத்துச் சண்டையில் பெருமை சேர்த்த விஜிந்தர், அகில் குமார்!

ஒலிம்பிக் போட்டிகளில் கால் இறுதிவரை எத்தனையோ முறை இந்திய குத்துச் சண்டை வீரர்கள் முன்னேறியுள்ளனர். உலகின் மிகச் சிறந்த வீரர்களிடம் சிறிய வித்தியாசத்தில் தோற்று பதக்க வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இந்த வரலாறு பீஜிங்கில் மாற்றி எழுதப்படவுள்ளது. மிடில் வெய்ட் (75 கி.கி.) பிரிவில் விஜிந்தரும், பாண்டம் வெய்ட் (54 கி.கி.) பிரிவில் அகில் குமாரும் நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுததப் போகிறார்கள்.

கடந்த மே மாதம் தைப்பீ நகரில் உலக குத்துச்சண்டை சங்கம் நடத்திய போட்டியில் ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கசகஸ்தான் வீரர் பக்தியார் ஆர்தேயீவை காலிறுதியில் தோற்கடித்தார் விஜேந்தர். போட்டி கடுமையாக இருந்தாலும் மிகச் சிறப்பாக சண்டை செய்து 12 - 7 என்று புள்ளிக்கணக்கில் விஜேந்தர் வெற்றி கண்டது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தது.

அதன்பிறகு பல சர்வதேசப் போட்டிகளில் விஜேந்திரின் வெற்றி, உலகளாவிய அளவில் 75 கி.கி. பிரிவிலுள்ள சிறந்த பாக்ஸர்களில் ஒருவர் இவர் என்பதை மெய்ப்பித்தது.

இவரைப் போலவே பாண்டம் வெய்ட் பிரிவில் தகுதிபெற்றுள்ள அகில் குமாரும் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீரராவார். ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டையிடக்கூடிய அகில் குமாரை பதக்க வரிசையில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இவர்களுடன் லைட் ஹெவி பிரிவில் ஜித்தேந்தர், ,தினேஷ் குமார் ஆகியோரும் பீஜிங்கில் களமிறங்குகின்றனர்.
_________________________________________________________________________

img1080729057_2_2.jpg

தொடர் ஓட்டத்தில் சாதனை புரிந்த மகளிர் அணி!

உலக அளவில் இந்தியாவின் ஆடவர்களைவிட மகளிர் தொடர்ந்து சிறந்து விளங்குவது தடகளத்தில்தான். ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீராங்கனைகள் இறுதிவரை வந்தும் பதக்கம் பெறாத குறை இன்றுவரை நீடிக்கிறது.

இக்குறையை இம்முறை போக்குவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது நமது 4 x 400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்ட அணி.

கடந்த மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசிய கிராண்ட் பிரீ தடகளப் போட்டிகளில் சித்ரா சோமன், ராஜா பூயம்மா, மன்தீப் கவுர், எஸ். கீதா ஆகியோர் கொண்ட மகளிர் தடகள அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 28.29 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றது மட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில் சீன மகளிர் அணி 2வது இடத்தைப் பெற்றது.

இந்த அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
 
கீழ்க்கண்ட வகைகளில் விளையாட்டுகள் நிகழவுள்ளன..

தட கள விளையாட்டுக்கள் (47)


ஓடுதல்
விரைவோட்டம்
தொடர் ஓட்டம்
தடை தாண்டும் ஓட்டம்
மாரத்தான்
நடைப்போட்டி
பாய்தல்
மும்முறைப் பாய்ச்சல்
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
தடியூன்றிப் பாய்தல்
எறிதல்
பரிதி வட்டம் எறிதல்
சம்மட்டி எறிதல்
ஈட்டி எறிதல்
குண்டெறிதல்
Triathlon (2)
Modern pentathlon (2)

நீர் விளையாட்டுக்கள் (46)

Diving (8)
நீச்சல், நீந்துதல் - Swimming (34)
ஒருங்கிணைந்த ஒய்யார நீச்சல் Synchronized swimming (2)
Water polo (2)

சீருடற்பயிற்சிகள் (18)

floor exercis
horizontal bar
horse vault
parallel bar
pommel horse
ring
asymmetric bars
balance beam
Rhythemic
Trampoline

தற்காப்புக் கலைகள்..

குத்துச்சண்டை (11)
டைக்குவாண்டோ (8)
யுடோ - Judo (14)
மல்யுத்தம் - Wrestling (18)

ஊர்தி ஓட்டங்கள்..

படகோட்டம் Rowing (14)
பாய்மரப் படகோட்டம் - Sailing (11)
Canoeing (16)
மிதிவண்டியோட்டம் - Cycling (18)

குழு விளையாட்டுக்கள்..

அடிப்பந்தாட்டம் (பேஸ்பால்) - Baseball (1)
கூடைப்பந்தாட்டம் - Basketball (2)
காற்பந்தாட்டம் - Football (soccer) (2)
கைப்பந்தாட்டம் - Volleyball (4)
வளைதடிப் பந்தாட்டம் (2)
மென்பந்தாட்டம் - Softball (1)
மேசைப்பந்தாட்டம் - Table tennis (4)
பூப்பந்தாட்டம் - Badminton (5)
டென்னிஸ் - Tennis (4)
Handball (2)

கருவி விளையாட்டுக்கள்..

அம்பெய்தல் - Archery (4)
வாளோச்சும் கலை - Fencing (10)
குறி பார்த்துச் சுடல் - Shooting (15)
பாரம் தூக்குதல் - Weightlifting (15)
Equestrian (6)
 
பழைய கதை...!

முதன்முதலில் தங்கம் வென்ற ஆசிய அணி என்ற பெருமை படைத்த இந்தியா..!

hockey.jpg




மார்ச் 10, 1928 ஆம் ஆண்டு ஹாக்கிப்போட்டிகளில் இந்திய அணிக்கான பொற்காலத்தை துவக்கும் ஒரு பயணம் கெய்சர் - இ - ஹிந்த் என்ற கப்பலில் தொடங்கியது.


1928 ல் ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் பங்கேற்க புறப்படும் முன் பம்பாய் அணியுடன் ஆன பயிற்சி ஆட்டத்தில் பிரிட்டிஷ் இந்திய அணி தோற்றுப்போனது. இந்திய அணியை வழியனுப்ப வந்திருந்தவர்கள் மொத்தம் மூன்றே பேர்.ஹாக்கி சங்கத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஹாக்கி மீது ஆர்வம் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாளர்.

ஆம்ஸ்டர்டம் செல்லும் வழியில் இங்கிலாந்தில் கால்பதித்த இந்திய அணி , ஆடிய 11 பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. அந்தக்காலக்கட்டங்களில் இப்படி சொல்லப்படுவதும் உண்டு. "ஹாக்கி மந்திரவாதி" என அழைக்கப்பட்ட தயான் சந்த் , பிரிட்டன் ராணியின் குடையின் கைப்பிடியைக்கொண்டு ஆடி கோல்கள் அடித்தார். ஹாலந்து செல்லும் முன் ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் பயிற்சி ஆட்டங்கள் ஆடிய இந்திய அணி 9 நாடுகளுடன் ஒலிம்பிக் போட்டியில் காலடி எடுத்து வைத்தது.[ இந்த ஆம்ஸ்டர்டம் போட்டிகளில் தான் முதன்முறையாக பெண்கள் களப்போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்]

முதல் போட்டி ஆஸ்திரியாவுடன் 6 - 0 என்ற கணக்கில் எளிதாக வென்றது. தயான்சந்த் 4 கோல்கள் அடித்து இருந்தார்.

அடுத்து பெல்ஜியமுடன் 9 - 0 கணக்கிலும் தொடர்ந்து டென்மார்க்கை 5- 0 கணக்கிலும் வென்று அரை இறுதிக்கு அட்டகாசமாக நுழைந்தது. அரை இறுதியில் 6 - 0 என்று சுவிட்சர்லாந்தை சுருட்டிய இந்தியா இறுதிப்போட்டியில் ஹாலந்தை சந்தித்தது.

50000 பேருக்கு முன்னால் சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்ற தைரியத்தில் ஆடிய ஹாலந்து அணியை 3 - 0 கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவின் கோல்கீப்பர் ரிச்சர்ட் அலன் இந்தப் போட்டிகளில் ஒரு கோல்கள் கூட பெறாதவர் என்ற பெருமையைப்பெற்றார்.
அரை இறுதி வரை ஜெய்பால்சிங் அணித்தலைவராகவும், இறுதிப்போட்டிக்கு மட்டும் எரிக் பின்னிகர் தலைவராக இருந்தார்.

மூன்று பேரினால் வழியனுப்பப்பட்ட இந்திய அணி ஆயிரக்கணக்கானோர் வரவேற்கப்பட இந்தியா வந்து சேர்ந்தனர்.

வெறும் மூன்று பேரால் வழியனுப்பப்பட்ட அணியை, முப்பது கோடி மக்களும் திரும்பிப்பார்க்க வைத்தது வெற்றி.. வெற்றி மட்டுமே..
 
மிக மிக அருமையான தகவல்களுடன், அனைவரையும் ஒலிம்பிக்கை எதிர் நோக்க வைத்துவிட்டீர்கள் ராஜா சார். இந்திய ஹாக்கி அணியின் முதல் வெற்ரியைப்பற்றிய விவரங்கள் பெருமூச்சு விட வைக்கின்றன. நன்றி.
 
அன்பு ராஜா அவர்களே,

மிக நல்ல திரிக்கு என் பாராட்டுகள்.

காற்றையும் சுத்தமாக்கி ( மாசு செய்யும் தொழிற்சாலைகளை மூடி)
அதிகபட்ச சீன வீரர்கள் தயாராய்க் காத்திருக்க
குளிர்நாட்டு வீரர்கள் சீனாவின் கோடையில் வியர்த்திருக்க
அதிர்ஷ்ட எண் நம்பிக்கை பலத்துடன் சீனா...

பார்க்கலாம் முடிவுகளை!

1928 - நினைத்து சிலிர்க்க வைக்கிறது!

கடந்தகால அனுபவங்கள் நம்மவர் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைக்கவேண்டாம் எனச்சொன்னாலும் -
உங்கள் ஆர்வமான முன்னோட்டங்களால் நானும் உற்சாகமாகிறேன்..

வெல்லட்டும் நம் வீரர்களும்!
 
ஒலிம்பிக் போட்டிகளின் உற்சாகம் ஒவ்வொருவருடமும் தவறாது மனதில் வந்து முகிழும்..!

போட்டி நாடுகள் யாராயினும்.. திறமையான சாதனைகள் நினைத்து மனம் பூரிக்கும்..!!

நம் வீரர்களும் அவ்வகை பூரிப்பைத் தருவார்களென்ற நம்பிக்கை மனதில் உருவாக்கும் பதிவு..!!

மிகச் சிறந்த பதிவுகளுக்கும் அதனோடான அரிதான பல செய்தித் தொகுப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் ராஜா அண்ணா. :)
 
ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை ஒலிம்பிக் வீரர்களின் பெயர்ப்பட்டியலை தேசிய ஒலிம்பிக் சபை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 வீராங்கணைகள் மற்றும் 3 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய நீச்சல் போட்டித் தொடர்பில் ஒரு வீரரும், ஒரு வீராங்கணையும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மயூம் ரஹீம் மற்றும் டெனியல் லீ ஆகியோர் நீச்சல் போட்டிகளுக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

சுசந்திகா ஜயசிங்க, நதீகா லக்மாலி, திலினி ஜயசிங்க, ஈ.எம். சேனாநாயக்க மற்றும் அனுருத்த ஜயசிங்க ஆகிய வீர, வீராங்கணைகள்; இலங்கையின் சார்பில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நீச்சல் போட்டியாளாகள் தெரிவு தேசிய தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் (ஜூன் 25) பெயரிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறெனினும், சர்வதேச நீச்சல் பேரவையின் தேர்வுக்கு அமைய இலங்கை தேசிய நீச்சல் தெரிவுக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்தள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.
 
அன்பு ஷிப்லி..!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுசந்திகா என்னும் வீராங்கனை, கடந்த முறை இலங்கைக்கு புகழ் தேடித்தந்த அதே சுசாந்திகா தானே..?
 
பழைய கதை..!

svRATHORE_wideweb__470x275,0.jpg

ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்..!


ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore; பிறப்பு: ஜனவரி 29, 1970 ஜெய்சால்மர், இராஜஸ்தான்) துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றார். இந்தியாவின் முதலாவது தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004 ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜரான சிங், டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 179புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஐக்கிய அரபு நாடுகளின் ஷேக் அகமத் அல்-மக்தும் 189 புள்ளிகள் வென்று தங்கப் பதக்கத்தைவென்றார். சீனாவின் வாங் ஷாக் வெண்கலம் வென்றார்.
 
அன்பு ஷிப்லி..!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுசந்திகா என்னும் வீராங்கனை, கடந்த முறை இலங்கைக்கு புகழ் தேடித்தந்த அதே சுசாந்திகா தானே..?

ஆம் நண்பரே...அவரேதான்..
 
பழைய கதை..!

Karnam2.jpg


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி..!

கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறிக்ககுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம் தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.
___________________________________________________________________________

300px-Leander_Wimbledon.jpg

1996 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற* லியாண்டர் பயஸ் (பி. ஜூன் 17, 1973)

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரர். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.
 
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் என்ற முழக்கத்தோடு இந்திய அணியை வாழ்த்துவோம்

இந்த முறை கண்டிப்பாக தங்க பதக்கம் கிடைக்கும் என நம்புவோம்
 
இன்று 110 கோடி உள்ள இந்தியா.... ஒலிம்பிக் வரலாற்றில் 120 ஆண்டுகளில் 17 பதக்கங்கள்.. பெற்றுள்ளது.

இந்த தடவை குறைந்து ஒரு சில தங்க பதக்கங்களையாவது பெறுமா..... என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது....
 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கம் பற்றிய தகவல்..

ஏனைய நாடுகளின் பங்களிப்பு..

இந்திய வீரர்களின் வெற்றி நிலவரம்...

இலங்கையின் வெற்றி மங்கை...

என ஏராளமான சுவையான தகவல்கள் கொடுத்து ஒலிம்பிக் விளையாட்டின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படித்தியிருக்கிறீர்கள். சுவைபடத் தகவல்கள் அளித்தமைக்கு என் நன்றிகள்.
 
08/08/08

இன்று(08/08/08) தொடங்கும் பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா பதக்கங்கள் பல பெற இறைவனை வேண்டிக்கொள்வோம் ,,,,:080402gudl_prv:
 
இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஒலிம்பிக் துவக்க விழா ஆரம்பமாக இருக்கிறது..

துவக்க விழாவின் கோலாகளமான நிகழ்ச்சிகளைக் காண ஆவலாக உள்ளேன்..

இந்தியா நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வீரர்களும் பதங்களோடு திரும்ப வாழ்த்துகிறேன்..!!
 
இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை நிச்சயமாக பார்த்துவிட்டு வருவார்கள் கவலை வேண்டாம்
 
Back
Top