தாலாட்டு

அந்த ஆளு சொல்லாத விசயமே இல்லைன்னு சிலரைச் சொல்லுவோம். அவர்களுள் எனக்குத் தெரிந்தவர்கள்.

1.வள்ளுவர் அய்யா
2.கண்ணதாசன் அய்யா
3.இளசு அண்ணன்

இங்கே ஏனிந்த பதிவு என்கிறீங்களா? சுட்டியை தட்டுங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3899

மிக்க நன்றி நண்பரே. இன்றுதான் இந்த திரியை படித்தேன்.
 
ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுறாய்
அடிச்சாரை சொல்லியழு

கண்ணே ஒன்னை யாரடிச்சார்
கண்மணியைத் தொட்டது யார்
பொன்னே உன்னை யாரடிச்சார்
பொன்மணியை தொட்டது யார்

அத்தை அடிச்சாளோ
அல்லி பூச்செண்டாலே
மாமன் அடிச்சானோ
மல்லிகைப் பூச்செண்டாலே

பாட்டி அடிச்சாளோ
*பாலூட்டுங் கையாலே
அக்கா அடிச்சாளோ
*அமுதூட்டும் கையாலே..

ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுறாய்
அடிச்சாரை சொல்லியழு

*பாலூட்டும் பாட்டி - அந்தக்காலம் தொட்டு புட்டிப்பாலூட்டல் இருக்கு. தேவை வேறாக இருக்கலாம்
*அமுதூட்டும் அக்கா - பிள்ளைகளுக்கிடையே சீரான இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்களோ. (எப்படியோ அக்கா இன்னொரு அம்மா)
 
சமீபத்தில் நான் கேட்டு ரசித்து மயங்கிய இந்த தாலாட்டு பாடலை மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=hkwSYV560LU

சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இது போன்ற பாடலை தினமும் இரவு நேரத்தில் கேட்க முடிந்தது.

இனி இது போன்ற பாடலை கேட்க முடியுமா?
 
சமீபத்தில் நான் கேட்டு ரசித்து மயங்கிய இந்த தாலாட்டு பாடலை மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=hkwSYV560LU

சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இது போன்ற பாடலை தினமும் இரவு நேரத்தில் கேட்க முடிந்தது.

இனி இது போன்ற பாடலை கேட்க முடியுமா?
 
மிக அருமையான தொகுப்பு. திரி. கீழைநாடான் , ஆதி, செல்வா, பூம்கள், அமரன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பதிபக்தி பாட்டு

சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் எனக்கு பிடித்த தாலாட்டு
 
Back
Top