Keelai Naadaan
New member
அன்புள்ள அனைவருக்கும் வணக்கங்கள்.
முன்பெல்லாம் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல்கள் பாடுவார்கள். அதை கேட்டு ரசிப்பது உண்மையிலேயே அத்தனை சுகமாயிருக்கும். அதுவும் படிப்பு குறைவானவர்கள், படிக்காதவர்கள் கூட அத்தனை அழகாய் லயித்து, வார்த்தைகளை கோர்த்து பாடுவார்கள். திரைப்பட பாடல்கள் அதிக பிரபலமான பிறகு சமீப காலங்களில் தாலாட்டு பாடல்கள் எங்கும் கேட்பதில்லை. அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றால் உண்டு. தாலாட்டு பாடல்கள் பாசவுணர்வை வளர்க்கும் என்பது என் அபிப்ராயம். பாடி பழகியவர்களுக்கு பலர் முன்னிலையில் பேசுவதும் எளிது. தாய்மை ஒரு வரப்பிரசாதம். தாலாட்டும் பாடும் வாய்ப்பும் அப்படியே. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழின் உச்சரிப்பு மாறுவது போல் தாலாட்டு பாடலும், அந்தந்த பகுதிகளின் இயற்கை சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. இலங்கை தாலாட்டு பாடல்களை அறிய மிக ஆவல். இந்த தாலாட்டு பாடல்களை அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லவேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன். ஆதலால், உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களால் திரட்ட முடிந்த தாலாட்டு பாடல்களை இங்கே பதிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆராரோ ஆரிரரோ என்பதற்கு யார் யாரோ...யாரிவரோ என்று பொருள் என கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த சில தாலாட்டு பாடல் வரிகளை இங்கே பதிக்கிறேன். இது வீடுகளில் பெரியவர்கள் பாடக் கேட்டது. கீழ்காணும் இந்த பாடல்வரிகளில் ஏதேனும் பிழை இருந்தால் அது என்னுடைய ஞாபக குறைவே தவிர அந்த பாடல்களில் இல்லை.
இதோ தாலாட்டு.....
லுலுலுலுலுலுலுவாயி....
சூ....ரே..ரே..ரே..ரே...ரே..ரே...ஏ
கண்ணே உறங்கு என்னம்மா
கண்மணியே நீயுறங்கு
பொன்னே உறங்கு
என்னம்மா நீ
பெட்டகமே கண்ணுறங்கு.
ராரிக்கோர் ராரி மெத்த
என்கண்ணே உனக்கு
ராமரோட பஞ்சு மெத்த
பஞ்சுமெத்த மேலிருந்து
பசுங்கிளியே கண்ணுறங்கு.
............................................................................................
ஆராரோ....ஆரிர..ரோ....ஓ
எங்கண்ணே ராமர் உன்னை தந்தாரோ...!
யாரடிச்சா நீயழுத-எங்கண்ணே
அடிச்சவர சொல்லியழு
வடக்க உறகிணறாம்
வாசல் எல்லாம் பால் கிணறாம்
பால் கிணத்த பாக்கவந்த
பசுங்கிளிய யாரடிச்சா
ஆத்தா அடிச்சாரோ
அல்லிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாரோ
தாழம்பூ செண்டால
மாமா அடிச்சாரோ
மல்லிகைப்பூ செண்டால
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூ செண்டால
அக்கா அடிச்சாளோ
ஆவாரம் பூ செண்டால
யாரும் அடிக்கவில்ல-என்னம்மா
ஐவரும் தீண்டவில்ல
பசிச்சு அழுதேனம்மா-நான்
பசிச்சழுதேன் தாயாரே
ராமர் பசு வளர்க்க
லச்சும்ணர் பால்கறக்க
சீதாங்கனி அம்மன் வந்து
தீமூட்டி பால்காய்ச்ச
போட்டுப்பால் போட்டாட்டி-என்கண்ணே
பசுந்தொட்டிலிலே போட்டாட்டி
ஆடுமாம் தொட்டில்-என்கண்ணே
அசையுமாம் பொன்னூஞ்சல்
பொன்னூஞ்சல் மேலிருந்து- நீ
பொய்யுறக்கம் கொண்ட கண்ணோ.
கண்ணாண கண்மணிக்கு
காதுகுத்த என்னாகும்
ஏலம் ஒரு வீசை
இளந்தேங்கா முன்னூறு
சீனி ஒரு போது
செல்ல மக(ன்/ள்) காது குத்த
தட்டில அரிசி வரும்
தங்க மாமா சீரு வரும்
பொட்டி(யி)ல அரிசி வரும்
பொன்னு மாமா சீருவரும்
சுத்தி சிவப்புக்கல்லு
தூருக்கோர் வெள்ளக்கல்லு
வரிச ஒரு நூறு ******
வாங்கி வந்தார் உங்க மாமா
நாளிநறுக்கு மஞ்ச
நறுநாளி பச்ச மஞ்ச
அரைச்சு குளிச்சாலும்
அங்கம் மினுமினுக்க
தேச்சு குளிச்சாலாம்
தெப்பம் கலகலங்க
மஞ்ச குளிச்சு- கண்ணே
உங்கள் அம்மா
மாதவம் செய்கையிலே
பாக்க வந்த பரமசிவர்
********
பூவு தந்தா வாடுமின்னு
பொன்னு/பிள்ளை தந்தார் தாலாட்ட
மாலை தந்தா வாடுமின்னு
மங்கை/மழலை தந்தார் தாலாட்ட
******** இந்த வரிகள் மறந்து விட்டேன்.
இன்னும் நிறைய மறந்துவிட்டேன்.
நீங்கள் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்.....கீழை நாடான்.
முன்பெல்லாம் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல்கள் பாடுவார்கள். அதை கேட்டு ரசிப்பது உண்மையிலேயே அத்தனை சுகமாயிருக்கும். அதுவும் படிப்பு குறைவானவர்கள், படிக்காதவர்கள் கூட அத்தனை அழகாய் லயித்து, வார்த்தைகளை கோர்த்து பாடுவார்கள். திரைப்பட பாடல்கள் அதிக பிரபலமான பிறகு சமீப காலங்களில் தாலாட்டு பாடல்கள் எங்கும் கேட்பதில்லை. அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றால் உண்டு. தாலாட்டு பாடல்கள் பாசவுணர்வை வளர்க்கும் என்பது என் அபிப்ராயம். பாடி பழகியவர்களுக்கு பலர் முன்னிலையில் பேசுவதும் எளிது. தாய்மை ஒரு வரப்பிரசாதம். தாலாட்டும் பாடும் வாய்ப்பும் அப்படியே. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழின் உச்சரிப்பு மாறுவது போல் தாலாட்டு பாடலும், அந்தந்த பகுதிகளின் இயற்கை சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. இலங்கை தாலாட்டு பாடல்களை அறிய மிக ஆவல். இந்த தாலாட்டு பாடல்களை அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லவேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன். ஆதலால், உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களால் திரட்ட முடிந்த தாலாட்டு பாடல்களை இங்கே பதிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆராரோ ஆரிரரோ என்பதற்கு யார் யாரோ...யாரிவரோ என்று பொருள் என கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த சில தாலாட்டு பாடல் வரிகளை இங்கே பதிக்கிறேன். இது வீடுகளில் பெரியவர்கள் பாடக் கேட்டது. கீழ்காணும் இந்த பாடல்வரிகளில் ஏதேனும் பிழை இருந்தால் அது என்னுடைய ஞாபக குறைவே தவிர அந்த பாடல்களில் இல்லை.
இதோ தாலாட்டு.....
லுலுலுலுலுலுலுவாயி....
சூ....ரே..ரே..ரே..ரே...ரே..ரே...ஏ
கண்ணே உறங்கு என்னம்மா
கண்மணியே நீயுறங்கு
பொன்னே உறங்கு
என்னம்மா நீ
பெட்டகமே கண்ணுறங்கு.
ராரிக்கோர் ராரி மெத்த
என்கண்ணே உனக்கு
ராமரோட பஞ்சு மெத்த
பஞ்சுமெத்த மேலிருந்து
பசுங்கிளியே கண்ணுறங்கு.
............................................................................................
ஆராரோ....ஆரிர..ரோ....ஓ
எங்கண்ணே ராமர் உன்னை தந்தாரோ...!
யாரடிச்சா நீயழுத-எங்கண்ணே
அடிச்சவர சொல்லியழு
வடக்க உறகிணறாம்
வாசல் எல்லாம் பால் கிணறாம்
பால் கிணத்த பாக்கவந்த
பசுங்கிளிய யாரடிச்சா
ஆத்தா அடிச்சாரோ
அல்லிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாரோ
தாழம்பூ செண்டால
மாமா அடிச்சாரோ
மல்லிகைப்பூ செண்டால
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூ செண்டால
அக்கா அடிச்சாளோ
ஆவாரம் பூ செண்டால
யாரும் அடிக்கவில்ல-என்னம்மா
ஐவரும் தீண்டவில்ல
பசிச்சு அழுதேனம்மா-நான்
பசிச்சழுதேன் தாயாரே
ராமர் பசு வளர்க்க
லச்சும்ணர் பால்கறக்க
சீதாங்கனி அம்மன் வந்து
தீமூட்டி பால்காய்ச்ச
போட்டுப்பால் போட்டாட்டி-என்கண்ணே
பசுந்தொட்டிலிலே போட்டாட்டி
ஆடுமாம் தொட்டில்-என்கண்ணே
அசையுமாம் பொன்னூஞ்சல்
பொன்னூஞ்சல் மேலிருந்து- நீ
பொய்யுறக்கம் கொண்ட கண்ணோ.
கண்ணாண கண்மணிக்கு
காதுகுத்த என்னாகும்
ஏலம் ஒரு வீசை
இளந்தேங்கா முன்னூறு
சீனி ஒரு போது
செல்ல மக(ன்/ள்) காது குத்த
தட்டில அரிசி வரும்
தங்க மாமா சீரு வரும்
பொட்டி(யி)ல அரிசி வரும்
பொன்னு மாமா சீருவரும்
சுத்தி சிவப்புக்கல்லு
தூருக்கோர் வெள்ளக்கல்லு
வரிச ஒரு நூறு ******
வாங்கி வந்தார் உங்க மாமா
நாளிநறுக்கு மஞ்ச
நறுநாளி பச்ச மஞ்ச
அரைச்சு குளிச்சாலும்
அங்கம் மினுமினுக்க
தேச்சு குளிச்சாலாம்
தெப்பம் கலகலங்க
மஞ்ச குளிச்சு- கண்ணே
உங்கள் அம்மா
மாதவம் செய்கையிலே
பாக்க வந்த பரமசிவர்
********
பூவு தந்தா வாடுமின்னு
பொன்னு/பிள்ளை தந்தார் தாலாட்ட
மாலை தந்தா வாடுமின்னு
மங்கை/மழலை தந்தார் தாலாட்ட
******** இந்த வரிகள் மறந்து விட்டேன்.
இன்னும் நிறைய மறந்துவிட்டேன்.
நீங்கள் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்.....கீழை நாடான்.