தேங்காய் பற்றிய குறிப்புகள்

மலகண்ணன் அவர்களே!!
ணடதிற்கு மிக்க மகிழ்ச்சி
காலையில் இதை செய்யலாம்..
 
தேங்காய் திரட்டுப் பால்

தேவையானப் பொருட்கள்

தேங்காய் - 2
பயத்தம்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்


செய்முறை

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.
கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். முந்திரியை வறுத்து போடவும்.
இதுவே தேங்காய் திரட்டிப்பால்.
இது சுவைமிகுந்த பாரம்பரிய உணவு.
 
தேங்காய் குழம்பு

தேவையானப் பொருட்கள்

தேங்காய் -- 2 மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டவடிவமாக வெட்டியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக வெட்டியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
அரைக்க:
சிவப்பு மிளகாய் -- 5 என்னம்
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
உப்பு -- தே.அ


தாளிக்க :

கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்


செய்முறை

*தேங்காய் துருவல் ,சோம்பு, சீரகம், வத்தல் சேர்த்து *நன்றாக அரைத்து பால் எடுக்கவும்.
*இரண்டு முறை பால் எடுக்கவும்.
*வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு *தளித்து கறிவேப்பிலை போடவும்.
*அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
*பின் தேங்காய்பாலை சேர்த்து உப்பு போடவும்.
*ஒரே ஒரு கொதிவந்ததும் இறக்கிவிடவும். நிறைய நேரம் கொதிக்கக் கூடாது.
*ரெடி
 
கார தேங்காய் பணியாரம்

தேவையானப் பொருட்கள்

கடலை மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை

*பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் ஒரு கப், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*அதில் கடலை மாவு சேர்த்து மறுபடியும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

*வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*வதக்கியதை மாவில் கலந்து பணியார சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
 
னு தேங்காய்

ப்பம் மிகவும் சுவையாக

ற்புதமாக இருந்தது நன்றி உங்களுக்கு

ப்புறம் அனு பால்பணியாரம் செய்முறை

லுப்படையாமல் தரமுடியுமா?
 
தேங்காய் பால் சூப்

தேவையான பொருள்கள்:-

தேங்காய் பால் - 1கப்

பால் - 1கப்

வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் - 4 பொடியாக நறுக்கியது

இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை - சிறிதளவு பொடியாக நறுக்கியது

எலுமிச்சை இலை - சிறிதளவு வாசனைக்கு

எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன்

சோள மாவு - 2ஸ்பூன்


செய்முறை:-

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.

அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, எலுமிச்சை இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.

1கொதி வந்த பின்பு தேங்காய் பாலுக்கு தேவையான உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.


சுவையான தேங்காய் பால் சூப் தயார்.

இப்பால் அருமையாக இருக்கும். இதை சீக்கிரமாக செய்து முடித்து விடலாம். குழந்தைகள் நலத்திற்கு நல்லது. இப்பாலை உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் பருகலாம்.இந்த சூப்பை எங்கள் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
 
Back
Top