தேங்காய் பால் சூப்
தேவையான பொருள்கள்:-
தேங்காய் பால் - 1கப்
பால் - 1கப்
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 பொடியாக நறுக்கியது
இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி தழை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
எலுமிச்சை இலை - சிறிதளவு வாசனைக்கு
எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன்
சோள மாவு - 2ஸ்பூன்
செய்முறை:-
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, எலுமிச்சை இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.
1கொதி வந்த பின்பு தேங்காய் பாலுக்கு தேவையான உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.
சுவையான தேங்காய் பால் சூப் தயார்.
இப்பால் அருமையாக இருக்கும். இதை சீக்கிரமாக செய்து முடித்து விடலாம். குழந்தைகள் நலத்திற்கு நல்லது. இப்பாலை உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் பருகலாம்.இந்த சூப்பை எங்கள் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.