உறைந்த நிமிடம்..!

இந்த அற்புத படைப்புக்கு ஐகேஷ் 500 வரங்கவா????????????
 
ஷிப்லி அண்ணா... பொதுவாக... பரிசளிப்பது அவரவரின் சொந்த விருப்பம்.. இதில் கேள்வி கேட்பது அவசியமற்றதே..!!:icon_ush::icon_ush:

உங்களின் விருப்பம் போல் செய்யுங்கள்..!
 
மன்றத்து பொக்கிசங்களை வெளி கொண்டுவரும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
விரைவில் பல வைரங்கள் வெளியே வரும்.
 
..............................................
எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
...................................................
கார்மேகங்கள் மழைபொழிய காத்திருப்பதை காட்சி படுத்தியிருப்பது மிக அற்புதம்
 
ஒருவேளை நினைவுவெட்டிகள் இருந்தால்கூட வெட்ட வெட்ட வளரத்தான் செய்யும்....
நல்ல கவிதையை தந்துள்ளீர்கள் ......
உறைந்த நிமிடம்....மனதில் உறங்கா நிமிடம்...
 
[FONT=TSC_Paranar]உறைந்த நிமிடம்..!

[/FONT]
[FONT=TSC_Paranar]வெயில் பொழுது[/FONT][FONT=TSC_Paranar]
துயில் கொள்ள
[/FONT][FONT=TSC_Paranar]
சாய்வுநாற்காலி தேடி
[/FONT][FONT=TSC_Paranar]
தோய்ந்து இருந்தது
[/FONT][FONT=TSC_Paranar]
கடலின் அருகில்..!
[/FONT][FONT=TSC_Paranar]...............................[/FONT][FONT=TSC_Paranar]

தூறலோடே திரும்பி
[/FONT][FONT=TSC_Paranar]
வந்தேன்..!
[/FONT][FONT=TSC_Paranar]
வெடித்து அழுதேன்..!
[/FONT][FONT=TSC_Paranar]
இப்போது கனமழை
[/FONT][FONT=TSC_Paranar]
என் வீட்டில்..!
[/FONT]​

மழை எழுதும் மடல் ..உன் பாதம் நோகாமல் இருக்க ,
உனக்காக வீதியை என் கண்ணீரால் சுத்தம் செய்கிறேன் ...
உன்னை தழுவத்தான் ஆசை ,
என்ன செய்ய ,
எனக்கு எதிரியாய் ,
உன் குடையும் உடையும் ...
என் பிறந்த வீடான மேகத்திலிருந்து ,
இடி இடிக்க ,மின்னல் பாதையில் ,
புறப்பட்டுவிட்டேன் ,
வழியில் நீ , பேசலாம் என்றால் ,
முடியவில்லை ,
என் புகுந்த வீடான பூமியின் தாகத்தை தீர்கவேண்டும், ஆகையால் இப்பொழுது வீடைபெருகிறேன்
 
Last edited by a moderator:
உறைந்த நிமிடம்...மனதை ஓங்கி
அறைந்த வரிகள்....இன்னும் வலிக்கிறது...!
 
பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சூரியன் தம்பிக்கும்..

ரசித்து பதிலிட்ட பிரபு அவர்களுக்கும்,

வெட்ட வெட்ட வளரும் என ஆற்றாமையை உணர்த்திய கா.ரமேஷ் அவர்களுக்கும்..

மழை சொன்ன பதில் போல் எழுதி விடையளித்த முத்துவேல் அவர்களுக்கும்..

வலியை உணர்ந்து வலிக்கும் இதயத்தோடு பின்னூட்டமிட்ட கோவிந்த் அவர்களுக்கும்..

மனம் நிறைந்த நன்றிகள். :)
 
உறைய வைத்த கவிதை...

ஒரு தூண்டுதலில் எழுதப்பட்ட கவிதையில்... இவ்வளவு உணர்வுகளை உள்ளடக்குதல் சாத்தியமா ? நீங்கள் செய்து விட்டீர்கள்...
///
தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!
///

அப்ப்லாஸ்!

நன்றி!
 
கவிதைகள் ரெம்ப நல்லா இருந்து ஆனால் கவிதைகளை படித்து விட்டு அதர்க்கு

பதில் தந்த நம்ம மன்றதின் தூண்கள் ரெம்ப அருமையான கவிதைகலும் வளங்கி

இருக்கிறார்கள் எல்லாம் கலக்கலோ,, கலக்கல் ,,,,,அப்பபா,,,,,,,,,!!!!!!!!!!
 
காதலின் மாறுபட்ட பக்கங்கள்.... அருமையான படைப்பு....:icon_rollout:
 
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தைகள் வர வில்லை என்னிடத்தில்
இது தானா காதல் ?

எப்ப போ என்னா கவிதைகள் பதித்து இருக்கிறார்கள்
ச,ச,ச எல்லாம் பார்க்காமலே போய்ட்டே
ரெம்ப
வாழ்த்துக்கள் .
பூமகள்
 
விலகிவிடு என்றுநீ தொலைதூரம் சென்றாலும்
விலகாத உன்னுருவம் கண்ணுக்குள் நிலைத்திருக்கும்
பயணம் முடிந்து விடைசொல்லிப் பிரிவதற்கு
புகைவண்டி பழ்க்கமா நம்பழக்கம்

உறைந்த நிமிடங்கள் அல்ல நெஞ்சை
உறைய வைத்த நிமிடங்கள்; உன்கவிதை
என்னைக் கரைய வைத்தக் கலவரங்கள்

கவிதாயினியே உன் கவிதைகள் ஊர்வலத்தில்
கற்பனையின் கைகோர்த்து கருத்துக்கள் நடக்கட்டும்
புதுவுணர்ச்சிகள் பூக்கட்டும்
பொன்மகளே, தமிழ்ப் பூமகளே வாழ்க
 
Last edited:
உறைந்த நிமிடம்..!

என்றோ மேய்ந்து பார்த்த கவிதையை இன்று ஒருமுறை உற்றுப்பார்க்கத் தோன்றியது. தாமரையின் கருத்துக்களோடு நானும் ஒத்துப்போகிறேன் காதலித்துத் திருமணம் செய்தவன் என்ற அளவில்...
 
சின்னத் தூறலாக ஆரம்பித்த கவிதை, , இடியுடன் கூடிய பின்னூட்டங்களால் கனமழையானதே ?

கவிமழை ஆனந்ததைத்தான் தந்தது. பாராட்டுக்கள் அனைவருக்கும் !

ரசிப்பது எப்படி என்றும், என் போன்ற புதியவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

இது போன்ற தூறல்களும், கனமழையும் தொடரட்டும், எங்கள் உள்ளத்தை நனைக்க, திக்குமுக்காடவைக்க !
 
Last edited:
என் அருகே, இடி விழுந்தாலும் ,
உறக்கம் கலையாது, உறங்கிகொண்டிருந்த நான் ,
இன்று, பதறியடித்து விழித்துக்கொண்டேன் ,
உன் கால் கொலுசு கேட்ட உடன் !

பெண்ணே ,
உன் இமையை திறக்காதே ,
நானும் ,உண்ணா விரத போராட்டம் நடத்த வேண்டிருக்கும் ,
உன் இமை என்னும் காதல் கதிர்வீச்சு என்னை தாக்கிகொண்டிருப்பதால்.!.........

பூக்கும் ,பூவருகே நீ நிற்காதே ,
உன் உதடுகளை தேன் என்று நினைத்து ,
வண்டுகள் கடித்துவிடும் !

என் வீட்டு தீபத்திருநாளில்,
காற்று மாசுபடவில்லை ,
உன் புன்னகை என்னும் மத்தாப்பு சிரிப்பால் !
 
கண்களால் அவளை பார்க்க முடியாமல் தவிக்கும் எனக்கு... இந்த கவிதைகளின் வரிகளால் என் மனம் ஆருதல் அடைகிறது..
 
Back
Top