அனுபவ குறள் - புத்தகம்!!

மீனாகுமார்;276672 said:
இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
மிகவும் பயனுள்ள செயல்...
உங்களை நினைக்க பெருமையாக உள்ளது....
சிறு கௌரவிப்பு செய்கின்றேன்... (தப்பாக நினைத்துவிடாதீர்கள்)
இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

கௌரவிப்பாக 2000 iCash.
 
Last edited:
அக்னி;276903 said:
இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

கௌரவிப்பாக 2000 iCash.

செய்தாகிவிட்டது அக்னி. மிக்க நன்றி....
 
இப்பகுதியை மீண்டும் தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
 
உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்.
 
உங்கள் அனுபவ குறள் வாசிப்பதற்க்கு இனிமையாக உள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகத்தை ட்வுன்லோட் செய்ய அனுமதியில்லை என்று வருகிறது.
 
நன்றி மீனாகுமார் அவர்களே! மிக அருமை.... நீங்கள் கொடுத்த விளக்கம் தெளிவாக நெஞ்சில் நின்றது... மீண்டும் நன்றி என் அடுத்த கதைக்கு கரு கொடுத்தமைக்கு.
 
அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.

அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.

அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.

என் இளவயதில் பணியிடத்தில் நான் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்த குறள்

ஆண்டுகள் சென்றதால் அறம் மறந்து விட்டேனா தெரியவில்லை

இங்கே பதித்தமைக்கு நன்றிகள்
 
"அறம்"என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இதற்கு இணையான சொல் எந்த மொழியிலும் கிடையாது.
 
Back
Top