மீனாகுமார்
New member
திருமணமானபின் சில ஆண்டுகள் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடுவது இப்போது பழக்கமாகிவிட்டது. அதற்குப் பின்னர் குழந்தைக்கு முயற்சி செய்து உடனே பெற்று விட்டால், குழந்தையை தள்ளிப்போடலாம், தவறில்லை என்பர். அவரே சில ஆண்டுகளாகியும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால், தாம் தள்ளிப்போட்டது தவறோ என்னும் குற்ற உணர்ச்சி கவ்விக் கொண்டு தவிப்பர். பிறகு வேண்டாத தெய்வமிருக்காது. பார்க்காத மருத்துவமனையிருக்காது. சுற்றாத கோவில் இருக்காது. இருக்காத விரதம் இருக்காது. பிள்ளைக்காக தவமிருப்பர். நீண்டநாளாகியும் அப்பேறு கிட்டவில்லையாயின் பழிச்சொற்கள், நிம்மதியின்மை என்று பிரச்சனை வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கும். அவர்களிடம் சென்று பிள்ளைச் செல்வத்தின் மகிமையை கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள் -எக்காரணம் கொண்டும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்- என்று.
நல்ல அறிவு மிகுந்த பிள்ளைகளை பெறும் பேற்றை விட சிறந்த பேறு வேறு இல்லை. அதுபோல் தம்முடைய பொருள் என்பது அவர்தம் மக்களே. அது அவரவர் செய்த வினைப்பயனால் வரும் என்கிறது குறள்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்.
நல்ல அறிவு மிகுந்த பிள்ளைகளை பெறும் பேற்றை விட சிறந்த பேறு வேறு இல்லை. அதுபோல் தம்முடைய பொருள் என்பது அவர்தம் மக்களே. அது அவரவர் செய்த வினைப்பயனால் வரும் என்கிறது குறள்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்.