மீனாகுமார்
New member
சில காலங்களுக்கு முன்னர் நாட்டை ஆளும் பொறுப்பும் சக்தியும் மன்னனிடமும் மற்றும் சிலரிடமும்மட்டுமே இருந்தது. சாராண குடிமகன் தன் வேலைகளை செவ்வனே செய்து விட்டு சந்தோசமாக வாழ்வு நடத்தி வந்தான். இன்றோ எந்த ஒரு வேலை செய்ய வேண்டுமாயினும் பலரின் உதவி தேவைப்படுகிறதே. நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாமே செய்ததில்லையே. யாரோ எங்கோ செய்த பொருட்கள் - நாம் காசு கொடுத்து வாங்கி வந்து அனுபவிக்கிறோம். தொலைபேசி வசதி, மின்சார வசதி, வாகனங்கள், மின்சார சாதனங்கள் என்று.... நாம் நம் வாழ்வில் பலரைச் சார்ந்துள்ளோம். நாம் உருப்படியாக எதையும் படைத்தோமா என்று தெரியாது. ஆனால் காசு மட்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி அனுபவிக்கலாம். இல்லையா பின்னே.
இப்படி ஒவ்வொரு விசயத்திற்க்கும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை மிக மிக அதிகரித்துவிட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் போய்விட்டோம். இவ்வாறு சார்ந்திருப்பதினால் ஒருவரோடு ஒருவர் பேசுவது அதிகரித்துள்ளது. எந்த ஒரு செயலும் அனுபவம் பெற்ற பலரிடம் கேட்டு செய்தோமாயின் மிக சிறப்பாக அமைகிறது. அங்ஙனம் பலரிடம் பேசும் போது விவாதம் வருகிறது. அப்போது அனுபவமும் அறிவும் பெற்றவன் சும்மா உட்கார்ந்திருந்தால் அவனால் பயன் விளையாது. அவன் கண்டவற்றை பிறரிடம் அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் இனிமையாகவும் உரைக்கின், அவர் கூறிய சொல்லை பிறர் எளிதில் ஏற்பர்.
அவ்வாறு அழகாக எடுத்துரைப்பதே ஒரு கலை என்பார்கள். அது எல்லார்க்கும் எளிதாக அமைந்து விடாது. இயற்கையாகவே பெற்றிருப்பின் அது இறைவன் தந்த வரம். இல்லை பலரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். பழக பழக வந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. அவ்வாறு சரியாக பேசும் திறமையும் பெற்று நல்ல அறிவுத்திறனோடு கூடியவரிடம் பிறர் பேசி வெற்றி பெறுதல் என்பது மிக மிக கடினமே.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்வன்மை பெற்று, எதற்க்கும் சோர்ந்திடாது எவர்க்கும், எச்சபைக்கும் அஞ்சாதவனை வெல்வது யார்க்கும் அரியதாகும்.
அங்ஙனம் சொல் திறம் பெற்று, எந்த ஒரு விசயத்தையும் விரைந்து அறிந்து, முடிவெடுத்து இனிமையாக்கக் கூறுபவனின் ஏவலுக்கு இந்த உலகம் பணியும். அவன் சொல்வதைக் கேட்கும்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
இத்தன்மை எந்த ஒரு துறைக்கும் பொருந்துவது வியப்பான இயல்பு. இன்றைய தொழில்உலகில் இத்தன்மை பெற்றிருப்பவன் தொழிலில் கொடிகட்டிப் பறப்பான். அரசியலில் இருப்பவனை உலகம் பின்தொடரும்.
இப்படி ஒவ்வொரு விசயத்திற்க்கும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை மிக மிக அதிகரித்துவிட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் போய்விட்டோம். இவ்வாறு சார்ந்திருப்பதினால் ஒருவரோடு ஒருவர் பேசுவது அதிகரித்துள்ளது. எந்த ஒரு செயலும் அனுபவம் பெற்ற பலரிடம் கேட்டு செய்தோமாயின் மிக சிறப்பாக அமைகிறது. அங்ஙனம் பலரிடம் பேசும் போது விவாதம் வருகிறது. அப்போது அனுபவமும் அறிவும் பெற்றவன் சும்மா உட்கார்ந்திருந்தால் அவனால் பயன் விளையாது. அவன் கண்டவற்றை பிறரிடம் அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் இனிமையாகவும் உரைக்கின், அவர் கூறிய சொல்லை பிறர் எளிதில் ஏற்பர்.
அவ்வாறு அழகாக எடுத்துரைப்பதே ஒரு கலை என்பார்கள். அது எல்லார்க்கும் எளிதாக அமைந்து விடாது. இயற்கையாகவே பெற்றிருப்பின் அது இறைவன் தந்த வரம். இல்லை பலரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். பழக பழக வந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. அவ்வாறு சரியாக பேசும் திறமையும் பெற்று நல்ல அறிவுத்திறனோடு கூடியவரிடம் பிறர் பேசி வெற்றி பெறுதல் என்பது மிக மிக கடினமே.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்வன்மை பெற்று, எதற்க்கும் சோர்ந்திடாது எவர்க்கும், எச்சபைக்கும் அஞ்சாதவனை வெல்வது யார்க்கும் அரியதாகும்.
அங்ஙனம் சொல் திறம் பெற்று, எந்த ஒரு விசயத்தையும் விரைந்து அறிந்து, முடிவெடுத்து இனிமையாக்கக் கூறுபவனின் ஏவலுக்கு இந்த உலகம் பணியும். அவன் சொல்வதைக் கேட்கும்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
இத்தன்மை எந்த ஒரு துறைக்கும் பொருந்துவது வியப்பான இயல்பு. இன்றைய தொழில்உலகில் இத்தன்மை பெற்றிருப்பவன் தொழிலில் கொடிகட்டிப் பறப்பான். அரசியலில் இருப்பவனை உலகம் பின்தொடரும்.