மீனாகுமார்
New member
---------------------------------
குறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.
தலைப்பு: யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170
நன்றி.
---------------------------------
அனுபவ குறள் -
என் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் ?அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.
அறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.
அப்போது −
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.
ம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.
உண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.
ஆனால் அது மட்டுமா அறிவு??. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அ?தறி கல்லா தவர்.
இக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.
ஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் ?
நாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...
அடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை ! இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.
இதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்லான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.
இப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.
அனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....
குறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.
தலைப்பு: யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170
நன்றி.
---------------------------------
அனுபவ குறள் -
என் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் ?அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.
அறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.
அப்போது −
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.
ம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.
உண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.
ஆனால் அது மட்டுமா அறிவு??. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அ?தறி கல்லா தவர்.
இக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.
ஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் ?
நாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...
அடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை ! இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.
இதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்லான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.
இப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.
அனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....
Last edited: