கீதம்
New member
ஏண்டி இவளே... இந்த இடத்தை ஒழுங்காப் பெருக்கலையா....? பாரு... குப்பை அப்படியே இருக்கு?
அட, இன்னாமா நீ? பேஜாரு பண்ணினுகீறே? நல்லாத்தான் பெருக்கீறேன்...சொம்மா... கூட கூட நின்னுகினு நோட்டம் வுடாத... போய் வேற வேல எதுனா இருந்தா பாரு...
ஆமாண்டி... எனக்கு நீ வேலைக்காரியா... உனக்கு நான் வேலைக்காரியான்னே தெரியமாட்டேங்குது... நல்லாத்தான் அதிகாரம் பண்றே... ஆமா... இந்த மேசையை கொஞ்சம் நகத்திப் போட்டு கூட்டினா என்ன?
நீ சொல்லவே இல்லியேம்மா...
வேலைக்காரி சொன்னாதான் செய்வாள்னு... ஜெகதீசன் ஐயா சும்மாவா சொல்லியிருக்காரு...
அட, நம்மளப்பத்தி கூட பாட்டு பாடினுகீறாரா? அப்புறம் என்னமா பாடினிருக்காரு...?
ம்! ரொம்ப முக்கியம். ஏதோ ஆர்வமாக் கேட்கிறியேன்னு தமிழ் மன்றம் பத்திச் சொன்னது தப்பா போச்சு.. முதல்ல வேலயப் பாருடி....
அது பாட்டுக்கு ஆயினுருக்கு.... நீ பாட்டுக்கு சொல்லினே இரு... காதுதான கேக்குது....சரி, கெடா வெட்டுனதுனல ப்ரைஸ் வெட்டுனது யாரு...?
இன்னும் சொல்லலையே... ஒண்ணா ரெண்டா.... பதினாலு கதைங்க. எல்லாத்தையும் பாத்து முடிவு சொல்றதுன்னா லேசுப்பட்ட வேலையா?
சர்தான்... கெடா வெட்டுனு பேர் வச்சினு.... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லாம இன்னாத்துக்கு இந்த ஆதவா இய்த்தடிக்கிறாரு....?
உன்கிட்ட கொடுத்திருந்தா... தோ... வீடு பெருக்கிறியே லட்சணமா அது மாதிரி அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு பார்வையை ஓட்டி கதையை முடிச்சிருப்பே.... அவர் பொறுமையா பாக்கவேண்டாமா?
ஏம்மா.... நெசமாலுமே ராஜாராம் கதையில வர மாதிரி எல்லா ஆடுங்களும் ஆத்தாகிட்ட போய் பொலம்புச்சுன்னு வச்சுக்கோ.... என்னா நடக்கும் சொல்லு...
என்னா நடக்கும்? நீயே சொல்லேன்.
ஜெகதீசன் ஐயா எழுதினா மாதிரி ஆத்தா 'எனுக்கு கெடா வோணாம்.... சிங்கம் கொண்டாங்கோடா'ன்னு கேக்கும்...அப்பால அல்லாரும் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிப்புடுவானுங்கோ.... அல்லாம் நம்ம நாக்கு படுத்துற பாடுதானம்மா.... எம்மவன்…. இத்துணூண்டு இருந்துனு எதுனா துன்றதுக்கு புச்சா செஞ்சு குடுன்னு ஒரே ரவுசு பண்ணினு கெடக்கு....இன்னாத்த சொல்றது...போ...
பேசாம உன் பையனுக்கு ஜானகி அம்மா சொன்ன பொருள் விளங்கா உருண்டையை செஞ்சு குடுத்து கொஞ்சநாளைக்கு அவன் வாயை அடைச்சிடு....
ஏம்மா அத்தினி கொடுமயாவா இருக்கும் அது....?
அடிப்பாவி... அவ்வளவு ருசியா இருக்கும்டி... செய்யத் தெரியாம செஞ்சா கொடுமயாவும் இருக்கும்....
ஐயோ... அப்ப வேற எதுனா சொல்லுமா.... அந்தப் பயபுள்ள அதாலயே என் மண்டய ஒடச்சாலும் ஒடக்கும். அப்பாரு மாதிரியே ஒண்ணும் இல்லாத்துக்கெல்லாம் பிரச்சினை பண்ணுது..
சிமரிபா வீட்டுல நடந்த மாதிரியா?
ஆக்காங்... ஆனா.... என்னாண்டதான் அல்லா ரவுசும்... இஸ்கூலுல டீச்சர் இன்னாமா மெச்சிக்கிறாங்கோ தெரியுமா.... அல்லாத்துலயும் ஃபஸ்ட் வரானாம்... நல்லா படிக்கவைய்யின்னு சொல்றாங்கோ....
டீச்சரே சொல்றாங்கன்னா நிச்சயம் அவன் நல்லா வருவான். நல்ல ஆசிரியர்கள் அமையிறது பெரிய விஷயம். மாதா பிதா குரு தெய்வம்னு அப்படியொரு டீச்சரப் பத்தி தங்கவேல் சொல்லியிருக்காரு...... படிக்கிற புள்ளய படிக்கவை... ஆண்டாளு....உன் பரம்பரைக்கே பேரு கிடைக்கும்...
புள்ள நல்லாதாம்மா படிக்கிறான்... ஆனா... லேசா திக்குவாயி...... அதான் மத்த பசங்க கிண்டல் செய்யும்போது கோவம் வந்து சடார்னு கையை ஓங்கிடுது...
இதெல்லாம் ஒரு குறையில்லைன்னு நீதான் ஆண்டாளு சொல்லிப் புரியவைக்கணும்... ஊனம் ஒரு குறையே இல்லைன்னு உயர்வான சிந்தனையுள்ள தன் நண்பர் பத்தி ரங்கராஜன் பெண் பார்க்கும் படலத்தில் எழுதியிருக்காருல்ல... இன்னைக்கு கிண்டல் பண்றவங்க முன்னாடி அவன் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு நீதான் அவனை உற்சாகப்படுத்தணும்.
சர்தாம்மா.... இஸ்கூலுல மாறுவேசப் போட்டி வச்சிகிறாங்களாம்... எதுனா வேசங்கட்டி வுடும்மான்னு ஒரே தொணதொணப்பு... நா யாரக் கண்டேன்...இன்னாத்த கண்டேன்....
ஏண்டி இப்படி பொலம்புறே? என்னைக்குப் போகணுமோ அன்னைக்கு இங்க அழைச்சிகிட்டு வா... சமீபத்துலதானே அவனுக்கு மொட்டை போட்டிருக்கே... ஆளும் ஒடிசலா இருக்கான்... காந்தி வேஷம் போட்டுடலாம்... சரியா? என்ன ஒண்ணு.... கையில தடி இருக்கேன்னு எல்லாரையும் அடிக்காம இருந்தா சரி... முரட்டுப் பயல்னு சொல்றியே... அதான் பயமாயிருக்கு... அப்புறம் சுடர்விழி சொன்ன மாதிரி கண்டிராத கோலத்தில்தான் காந்தியைப் பார்க்கணும்...
மொரட்டுத்தனத்ததான் எப்புடி கொறைக்கிறதுன்னே தெரியலமா.... எவ்ளோ அடிச்சாலும் திருந்தமாட்டேங்குது... இன்னாதான் பண்றதோ....
அடிக்காதடி....புள்ளைகளை அடிக்காமத் திருத்தணும்.... அடிக்க அடிக்க அடாவடிதான் அதிகமாகும். உனக்கொண்ணு தெரியுமா ஆண்டாளு... செல்லப்பிராணி வளர்த்தா மூர்க்கம் குறையுமாம்... நீயும் உன் மகனுக்கு ஏதாவது வளக்குறதுக்கு வாங்கி கொடேன்...
எங்கூட்டாண்ட ஒரு பூனை குட்டி போட்டுருக்கு... நெத்தமும் குட்டிங்கள வாயிலக் கவ்வினு அங்கயும் இங்கயும் எடம் மாத்திட்டே திரியும்... இவன் அதுக்குப் பாலு வைக்கசொல்லோ... கொஞ்சநாளா ஒரு எடமா இருக்கு....அதத்தான் தூக்கினு... தோள் மேல போட்டுனு... மூஞ்சோட மூஞ்சி வச்சி கொஞ்சினு திரியிறான்.
நீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..
அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....
அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.
ராசாத்தியோடதோ என்னவோ?
என்னடி உளர்றே..?
கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...
ஓ... அதைச் சொல்றியா? அதுல பாரு... அக்கா கொடுத்த பணத்தில சின்னக்குட்டி புருஷனுக்கு வைத்தியம் பாக்காம நேர்த்திக்கடன் நிறைவேத்தப் போறாளாம்... அக்காவை ஏமாத்துறதா நினைச்சு தன்னையே ஏமாத்திக்கிறா.. என்னைக்குதான் இந்த மூடநம்பிக்கைகள் ஒழியுமோ தெரியலை...
இப்படியே போனா.... ஜெகதீசன் ஐயா எழுதுனா மாதிரி போலிசாமியாரண்ட சிக்கி கருப்பாயி புள்ளயக் காவு கொடுத்துட்டு குய்யோ மொறையோன்னு கதறினு கெடக்குற மாதிரி கதறினுக் கெடக்கவேண்டியதுதான்...
அவ மறுபடியும் அதே ஆள்கிட்டதானே போறா... என்ன சொல்லித்தான் திருத்துறதோ....
அல்லாரும் பிம்பிசாரன் மவராசா மாதிரி சொன்னா கேட்டுனு நடப்பாங்களா...?
சொல்றவங்க கருணைக்கடலான புத்தரா இருந்தா ஒருவேளை இது நடக்கலாம்.
கருணையோட பொட்டலமா இருந்தாலும் பிரிக்காதீங்கோன்னு பயமுறுத்துறாரே கலாசுரன்... எதுக்கும் ஜாக்கிரதையாதான் இருக்கணும்...
இப்படித்தான் ஈரம் கதையில் அஞ்சலியோட பாட்டி அவளுக்காக ரெண்டுநாள் மருத்துவமனையில் தங்கவே அத்தனை பிகு பண்ணிட்டு கடைசியில் அவ பிழைச்சு வந்ததும் தான் கடா வெட்டினதாலதான்னு வாய் கூசாம சொல்றாங்களே....
நெசம்தாம்மா... அப்புடியாப்பட்ட சனங்கோ நெறிய கீறாங்கோ......இந்தக் கதையில பாரு... பெத்து வளத்து ஆளாக்குன அப்பாருக்கு ஒருவேள சோறு போடாம வெரட்டி அடிச்சி பரலோகத்துக்கே அனுப்புன புள்ளங்களும் இருக்காங்கன்னு கலையரசி சொல்லிருக்காங்களே....
ஆண்டாளு.... சமீபத்துல முத்துக்கு முத்தாகன்னு ஒரு படம் வந்திச்சே... பாத்தியா.... அஞ்சு புள்ளைகளைப் பெத்தும் அவங்க ரெண்டுபேரும் கடைசி காலத்துல கஷ்டப்படுறதை....
இன்னும் பாக்கலம்மா... சரவணன் விமர்சனம் எயுதினுக்காரே.... அத்தப் படிச்சேன்.... இனிமேதான் பாக்கணும்... எங்கம்மா வெளிய தெருவ போவமுடிது.... எங்கூட்டுக்காருக்கு வாச்சிமேன் வேல.....எனுக்கும் ரொம்பநாளா எங்கியாச்சும் டூரு போணுமுனு ஆசதான்... இந்தப் பயலும் புடுங்குறான்... துட்டு வோணாமாமா?
இப்படி சேத்துவச்ச ஆசையெல்லாம் தான் கனவுல வருமாம். சிமரிபாவுக்கு மானசரோவர் போன கனவு வந்திருக்கே...
கெனவுலயாவது நெறவேறுதே.... இப்படிக் கல்யாணக் கெனவோட சந்தோசமா இருந்தவரோட கல்யாணம் நின்னுபோனா அவரு மனசு என்னா பாடுபடும்... ஜார்ஜ் கதையில என்னமா சொல்லினுக்காரு....
இதுவும் கடந்துபோகும்னு மனசைத் தேத்திக்கவேண்டியதுதான். நிவாஸும் இப்படிதான் சலனப்படுத்திய சில தருணங்களைத் தவிர்க்க விரும்பறார். தவிர்க்க முடிஞ்சிதா என்னன்னு தெரியலை.
எப்புடி முடியும்? காதலுதான் கண்ணக்கட்டிப்பூடுதே... திவ்யாவுக்கு வாயையும் கட்டிப்பூட்டுதாமே...?
அதாண்டி காதல்... ஆனா... ஜெகதீசன் ஐயா ஊருக்குப் போனாலும் போனார்.... காதல் கவிதைகள் பக்கம் ஒரே வறட்சிதான்.
இந்த வயசிலயும் இன்னா ஜோரா காதல் கவிதைங்கோ பாடுறாரு....
காதலுக்கு ஏதுடி வயசு? ரங்கராஜன் எழுதின made for each other கிற திரியைப் படிக்கலையா? வயசான காலத்தில் அந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கிற அன்னியோன்னியத்தையும் அந்திமப் பொழுதுகளையும் கண்கூடாப் பார்க்கிற பாக்கியம் அவருக்குக் கிடைச்சிருக்கே... படிக்கிற நமக்கே மனசைப் பிசையுதே... பார்த்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?
எத்தினி வயசானா இன்னா? ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற பாசம் எப்புடி கொறையும்? வயசான கலத்துல தேவரையா பாசம் வெச்சினுருந்த கருப்பு ஊருக்காக தன் உசிரையே வுட்டுடுச்சே...
இந்தக் கதையை ரவீதானே எழுதியிருக்கார்?
ஆமா...அதே மாதிரி பாசம் வெச்சினு இருந்த புள்ள ராகுலு சிரிச்ச சிரிப்பால அதோட கெடா பலியாப்பூடுச்சின்னு ஆத்தா சம்மதம்னு சிவாஜி எழுதிக் கெலங்கடிச்சிட்டாரே...மாடன சந்தக்கி இட்டாந்துட்டு அந்தக் குட்டிப்பய மாணிக்கம் சொல்லுற கத கண்ணுல தண்ணி வரவக்கிது... டெல்லாஸு எய்தினுகீறாரு.......
சின்னப்பசங்க ஆசை ஆசையா வளர்த்த பிராணிகளை அவங்ககிட்டயிருந்து பிரிச்சாலே அவங்களோட பிஞ்சுநெஞ்சம் தாங்காது....அதிலயும் தனக்காகத்தான்னு சொல்லி தன் கண் முன்னாடியே பலிபோட்டா எந்தக் குழந்தையாலதான் தாங்கமுடியும்? பாபுவோட நிலையை நினைச்சுப் பாக்கவே முடியலை... சுரேஷ் எழுதினது இது .
அதுக்கே அப்புடி சொல்றியே... முத்துராசுவுக்கு அவன் செல்லக் கெடா கருப்பையே சூப்பு வெச்சிக்குடுத்தா அதும்மனசு படுற பாட்ட இன்னான்னு சொல்றது? நிவாஸ் அப்படியே மனசத் தொட்டுட்டாரு....
அகிம்சையை பேசுறோம், படிக்கிறோம், யாரு அதுப்படி நடக்கிறா? தெருநாய்களைக் கூட விட்டுவைக்காம தங்களோட சுயநலத்துக்காகக் கொல்ற மனுஷங்களும் இந்த உலகத்துலதான் இருக்காங்கன்னு சுரேஷ் எழுதியிருக்கரே...
நானும் எங்க கொலசாமிக்கு படையலுக்கு நேர்ந்துனு கெடா வெட்டுறது பயக்கம்தான். இந்தக் கதைங்கள பாக்க சொல்லோ.... எனுக்கே பாவமா கீதும்மா.... இன்னாத்துக்கு அப்புடி செய்யுறோம்... அல்லாம் நாம் துன்னத்தானேன்னு அல்பமா கீதும்மா... கோயிலுக்கு போனா சாமி கும்புட்டோமா வந்தோமான்னு இருக்கோணும்... பலியெல்லாம் கொடுக்கத்தாவலன்னு நெனைக்கவெக்கிது...
நீ கோவிலுக்குப் போய் சாமி கும்புடுறதைப் பத்திப் பேசுற...ஆனா... கோவிலுக்குப் போயும் கடவுள்கிட்ட எதை வேண்டப் போனோமோ அதை மறந்திட்டு சக்திமான் நினைப்பிலயும், பிரியாணி நினைப்பிலயும் இருந்த குழந்தைகளைப் பத்தி ஆளுங்க கதை எழுதியிருக்காரே....
கொயந்தைங்கதானம்மா.... அல்லாம் பெருசானா தானா சரியாப்பூடும்.
கடவுளை கால் செருப்பா நினைக்கிறேன்னு ரவீ சொன்னா நீ என்னன்னு நினைப்பே....?
அடக்கடவுளே... நல்லாத்தானே இருந்தாரு.... இன்னாத்துக்கு ராங்காப் பேசினிகீறாரு....?
ராங்கெல்லாம் ஒண்ணும் இல்ல.. முழுசா படிச்சா உனக்குப் புரியும்...
அட... ஆமாம்... நான் தான் ராங்கா நெனச்சிட்டேன்... அல்லா கோயிலும் நமக்கு ஒண்ணுதாம்மா... எம்மவனுக்கு மொத மொட்ட நாகூர்லதான் போட்டது... என்னவோ எங்கூட்டுக்காரு வயில அத்தான் பயக்கமாம். ரெண்டாவது கொலசாமிக்கி... தோ... மூணாவது வேளாங்கண்ணி.... நாங்க அதெல்லாம் பாக்குறதில்லம்மா...
எறும்புளும் துரும்புளும் தளும்பும் இறைமை
சிறும்பெரும் கருதாமல் வணங்கு.
மனிதமே மதமாகும் உயிரெலாம்நம் சாதியாகும்
சமரசம் செம்மையுறச் செய்.
இறங்கட்டும் கடவுள் மனிதனுக்குள் நிரம்பட்டும்
இரங்கட்டும் எல்லா உயிர்க்கும்.
எத்தனை அற்புதமா நாகரா ஐயா சொல்லியிருக்கார் பார். உன்னை மாதிரி எல்லாரும் இருந்தாதான் பிரச்சனையே இல்லையே.... கோவிலில மட்டும்தான் சாமின்னு இல்ல.... எல்லா இடத்திலயும் கடவுள் இருக்கார்னு ஜானகி அம்மா எடுத்துப் பதிக்கிற திருமந்திர விளக்கத்தில் தாமரை அழகாச் சொல்லியிருக்கார்.
காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுல் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றான் அன்றே.
கடவுள் எல்லா இடத்திலயும் இருக்காருன்னு விளக்கம் சொல்லியிருக்கார். அது மட்டுமில்ல.... நம்மால் செய்யமுடிகிற உதவியை மத்தவங்களுக்குச் செய்தாலே போதுமாம், கடவுளை அடைஞ்சிடலாமாம்.
யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
கடவுளை அடைய மிகவும் எளிய வழி இதானாம்.
இதெல்லாம் நீ சொல்றதால தெரியிது.... இல்லனா... இந்த மரமண்டைக்கு எங்க புரியப்போவுது...?
மனுஷங்களை மரம்னு திட்டுறது தப்புன்னு குணமதி சொல்றார் தெரியுமா?
அய்யே.... அதுல இன்னா தப்பு? மரம் மாதிரி நின்னுகிறான்.... மரம் மாதிரி ஃபீலிங்ஸே இல்லாம கீறான்னு சொன்னா தப்பாமா?
மரமும் உணர்வுடைத்து மாந்தரை வைய
மரமென் றுரைப்பதுவும் மாசு.
மரத்துக்கும் உயிர் இருக்கு... உணர்வுகள் இருக்குன்னு சொல்றார்... இனிமே உன்னை மரமண்டைன்னு சொல்லிக்காதே... என்னாடி..?
சர்தாம்மா... படிச்சவுங்கோ பதவிசா சொல்லிப்பூடுறாங்கோ... படிக்காத நானெல்லம் வேஸ்டுதாம்மா....
படிச்சா மட்டும் போதுமா? பண்பு வேணாமா?
இன்னாமா பலய படத்து டைட்டில சொல்றே?
உண்மைதாண்டி.... பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு வாத்தியாரே மாணவிகள்கிட்ட வழிஞ்சா அவரை என்னன்னு சொல்றது?
ம்? ஜொள்ளு வாத்தின்னுதான் சொல்லோணும்...
அட... இப்படிதான் ஜெகதீசன் ஐயா அந்த வாத்தியாருக்குப் பேர் வச்சிருக்கார்... நீயும் சரியா சொல்லிட்டியே... லொள்ளுதாண்டி உனக்கும்....
லொள்ளுவாத்திக்கு இல்லாத லொள்ளா.... ஆமா... லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்னு படம் எடுத்துனுருந்தாரே.... எப்புடிக்கீது?
ஜோராக் கீது....ச்சீ.... உன்கிட்ட இன்னும் கொஞ்சநேரம் பேசினா உன்னை மிஞ்சிடுவேன் போல இருக்கு.... வேலைதான் முடிஞ்சுபோச்சில்ல.... கெளம்பும்மா தாயே.....
அட.... இன்னாமா... இன்னைக்கிதான் கொஞ்ச டைம் கெடச்சிது... உன்னாண்ட பேசி நாலு மேட்டரு தெரிஞ்சிக்கலாம்னா தெரத்தினுகீறியே....
அப்ப சரி...உக்காரு...
அட, இன்னாமா நீ? பேஜாரு பண்ணினுகீறே? நல்லாத்தான் பெருக்கீறேன்...சொம்மா... கூட கூட நின்னுகினு நோட்டம் வுடாத... போய் வேற வேல எதுனா இருந்தா பாரு...
ஆமாண்டி... எனக்கு நீ வேலைக்காரியா... உனக்கு நான் வேலைக்காரியான்னே தெரியமாட்டேங்குது... நல்லாத்தான் அதிகாரம் பண்றே... ஆமா... இந்த மேசையை கொஞ்சம் நகத்திப் போட்டு கூட்டினா என்ன?
நீ சொல்லவே இல்லியேம்மா...
வேலைக்காரி சொன்னாதான் செய்வாள்னு... ஜெகதீசன் ஐயா சும்மாவா சொல்லியிருக்காரு...
அட, நம்மளப்பத்தி கூட பாட்டு பாடினுகீறாரா? அப்புறம் என்னமா பாடினிருக்காரு...?
ம்! ரொம்ப முக்கியம். ஏதோ ஆர்வமாக் கேட்கிறியேன்னு தமிழ் மன்றம் பத்திச் சொன்னது தப்பா போச்சு.. முதல்ல வேலயப் பாருடி....
அது பாட்டுக்கு ஆயினுருக்கு.... நீ பாட்டுக்கு சொல்லினே இரு... காதுதான கேக்குது....சரி, கெடா வெட்டுனதுனல ப்ரைஸ் வெட்டுனது யாரு...?
இன்னும் சொல்லலையே... ஒண்ணா ரெண்டா.... பதினாலு கதைங்க. எல்லாத்தையும் பாத்து முடிவு சொல்றதுன்னா லேசுப்பட்ட வேலையா?
சர்தான்... கெடா வெட்டுனு பேர் வச்சினு.... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லாம இன்னாத்துக்கு இந்த ஆதவா இய்த்தடிக்கிறாரு....?
உன்கிட்ட கொடுத்திருந்தா... தோ... வீடு பெருக்கிறியே லட்சணமா அது மாதிரி அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு பார்வையை ஓட்டி கதையை முடிச்சிருப்பே.... அவர் பொறுமையா பாக்கவேண்டாமா?
ஏம்மா.... நெசமாலுமே ராஜாராம் கதையில வர மாதிரி எல்லா ஆடுங்களும் ஆத்தாகிட்ட போய் பொலம்புச்சுன்னு வச்சுக்கோ.... என்னா நடக்கும் சொல்லு...
என்னா நடக்கும்? நீயே சொல்லேன்.
ஜெகதீசன் ஐயா எழுதினா மாதிரி ஆத்தா 'எனுக்கு கெடா வோணாம்.... சிங்கம் கொண்டாங்கோடா'ன்னு கேக்கும்...அப்பால அல்லாரும் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிப்புடுவானுங்கோ.... அல்லாம் நம்ம நாக்கு படுத்துற பாடுதானம்மா.... எம்மவன்…. இத்துணூண்டு இருந்துனு எதுனா துன்றதுக்கு புச்சா செஞ்சு குடுன்னு ஒரே ரவுசு பண்ணினு கெடக்கு....இன்னாத்த சொல்றது...போ...
பேசாம உன் பையனுக்கு ஜானகி அம்மா சொன்ன பொருள் விளங்கா உருண்டையை செஞ்சு குடுத்து கொஞ்சநாளைக்கு அவன் வாயை அடைச்சிடு....
ஏம்மா அத்தினி கொடுமயாவா இருக்கும் அது....?
அடிப்பாவி... அவ்வளவு ருசியா இருக்கும்டி... செய்யத் தெரியாம செஞ்சா கொடுமயாவும் இருக்கும்....
ஐயோ... அப்ப வேற எதுனா சொல்லுமா.... அந்தப் பயபுள்ள அதாலயே என் மண்டய ஒடச்சாலும் ஒடக்கும். அப்பாரு மாதிரியே ஒண்ணும் இல்லாத்துக்கெல்லாம் பிரச்சினை பண்ணுது..
சிமரிபா வீட்டுல நடந்த மாதிரியா?
ஆக்காங்... ஆனா.... என்னாண்டதான் அல்லா ரவுசும்... இஸ்கூலுல டீச்சர் இன்னாமா மெச்சிக்கிறாங்கோ தெரியுமா.... அல்லாத்துலயும் ஃபஸ்ட் வரானாம்... நல்லா படிக்கவைய்யின்னு சொல்றாங்கோ....
டீச்சரே சொல்றாங்கன்னா நிச்சயம் அவன் நல்லா வருவான். நல்ல ஆசிரியர்கள் அமையிறது பெரிய விஷயம். மாதா பிதா குரு தெய்வம்னு அப்படியொரு டீச்சரப் பத்தி தங்கவேல் சொல்லியிருக்காரு...... படிக்கிற புள்ளய படிக்கவை... ஆண்டாளு....உன் பரம்பரைக்கே பேரு கிடைக்கும்...
புள்ள நல்லாதாம்மா படிக்கிறான்... ஆனா... லேசா திக்குவாயி...... அதான் மத்த பசங்க கிண்டல் செய்யும்போது கோவம் வந்து சடார்னு கையை ஓங்கிடுது...
இதெல்லாம் ஒரு குறையில்லைன்னு நீதான் ஆண்டாளு சொல்லிப் புரியவைக்கணும்... ஊனம் ஒரு குறையே இல்லைன்னு உயர்வான சிந்தனையுள்ள தன் நண்பர் பத்தி ரங்கராஜன் பெண் பார்க்கும் படலத்தில் எழுதியிருக்காருல்ல... இன்னைக்கு கிண்டல் பண்றவங்க முன்னாடி அவன் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு நீதான் அவனை உற்சாகப்படுத்தணும்.
சர்தாம்மா.... இஸ்கூலுல மாறுவேசப் போட்டி வச்சிகிறாங்களாம்... எதுனா வேசங்கட்டி வுடும்மான்னு ஒரே தொணதொணப்பு... நா யாரக் கண்டேன்...இன்னாத்த கண்டேன்....
ஏண்டி இப்படி பொலம்புறே? என்னைக்குப் போகணுமோ அன்னைக்கு இங்க அழைச்சிகிட்டு வா... சமீபத்துலதானே அவனுக்கு மொட்டை போட்டிருக்கே... ஆளும் ஒடிசலா இருக்கான்... காந்தி வேஷம் போட்டுடலாம்... சரியா? என்ன ஒண்ணு.... கையில தடி இருக்கேன்னு எல்லாரையும் அடிக்காம இருந்தா சரி... முரட்டுப் பயல்னு சொல்றியே... அதான் பயமாயிருக்கு... அப்புறம் சுடர்விழி சொன்ன மாதிரி கண்டிராத கோலத்தில்தான் காந்தியைப் பார்க்கணும்...
மொரட்டுத்தனத்ததான் எப்புடி கொறைக்கிறதுன்னே தெரியலமா.... எவ்ளோ அடிச்சாலும் திருந்தமாட்டேங்குது... இன்னாதான் பண்றதோ....
அடிக்காதடி....புள்ளைகளை அடிக்காமத் திருத்தணும்.... அடிக்க அடிக்க அடாவடிதான் அதிகமாகும். உனக்கொண்ணு தெரியுமா ஆண்டாளு... செல்லப்பிராணி வளர்த்தா மூர்க்கம் குறையுமாம்... நீயும் உன் மகனுக்கு ஏதாவது வளக்குறதுக்கு வாங்கி கொடேன்...
எங்கூட்டாண்ட ஒரு பூனை குட்டி போட்டுருக்கு... நெத்தமும் குட்டிங்கள வாயிலக் கவ்வினு அங்கயும் இங்கயும் எடம் மாத்திட்டே திரியும்... இவன் அதுக்குப் பாலு வைக்கசொல்லோ... கொஞ்சநாளா ஒரு எடமா இருக்கு....அதத்தான் தூக்கினு... தோள் மேல போட்டுனு... மூஞ்சோட மூஞ்சி வச்சி கொஞ்சினு திரியிறான்.
நீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..
அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....
அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.
ராசாத்தியோடதோ என்னவோ?
என்னடி உளர்றே..?
கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...
ஓ... அதைச் சொல்றியா? அதுல பாரு... அக்கா கொடுத்த பணத்தில சின்னக்குட்டி புருஷனுக்கு வைத்தியம் பாக்காம நேர்த்திக்கடன் நிறைவேத்தப் போறாளாம்... அக்காவை ஏமாத்துறதா நினைச்சு தன்னையே ஏமாத்திக்கிறா.. என்னைக்குதான் இந்த மூடநம்பிக்கைகள் ஒழியுமோ தெரியலை...
இப்படியே போனா.... ஜெகதீசன் ஐயா எழுதுனா மாதிரி போலிசாமியாரண்ட சிக்கி கருப்பாயி புள்ளயக் காவு கொடுத்துட்டு குய்யோ மொறையோன்னு கதறினு கெடக்குற மாதிரி கதறினுக் கெடக்கவேண்டியதுதான்...
அவ மறுபடியும் அதே ஆள்கிட்டதானே போறா... என்ன சொல்லித்தான் திருத்துறதோ....
அல்லாரும் பிம்பிசாரன் மவராசா மாதிரி சொன்னா கேட்டுனு நடப்பாங்களா...?
சொல்றவங்க கருணைக்கடலான புத்தரா இருந்தா ஒருவேளை இது நடக்கலாம்.
கருணையோட பொட்டலமா இருந்தாலும் பிரிக்காதீங்கோன்னு பயமுறுத்துறாரே கலாசுரன்... எதுக்கும் ஜாக்கிரதையாதான் இருக்கணும்...
இப்படித்தான் ஈரம் கதையில் அஞ்சலியோட பாட்டி அவளுக்காக ரெண்டுநாள் மருத்துவமனையில் தங்கவே அத்தனை பிகு பண்ணிட்டு கடைசியில் அவ பிழைச்சு வந்ததும் தான் கடா வெட்டினதாலதான்னு வாய் கூசாம சொல்றாங்களே....
நெசம்தாம்மா... அப்புடியாப்பட்ட சனங்கோ நெறிய கீறாங்கோ......இந்தக் கதையில பாரு... பெத்து வளத்து ஆளாக்குன அப்பாருக்கு ஒருவேள சோறு போடாம வெரட்டி அடிச்சி பரலோகத்துக்கே அனுப்புன புள்ளங்களும் இருக்காங்கன்னு கலையரசி சொல்லிருக்காங்களே....
ஆண்டாளு.... சமீபத்துல முத்துக்கு முத்தாகன்னு ஒரு படம் வந்திச்சே... பாத்தியா.... அஞ்சு புள்ளைகளைப் பெத்தும் அவங்க ரெண்டுபேரும் கடைசி காலத்துல கஷ்டப்படுறதை....
இன்னும் பாக்கலம்மா... சரவணன் விமர்சனம் எயுதினுக்காரே.... அத்தப் படிச்சேன்.... இனிமேதான் பாக்கணும்... எங்கம்மா வெளிய தெருவ போவமுடிது.... எங்கூட்டுக்காருக்கு வாச்சிமேன் வேல.....எனுக்கும் ரொம்பநாளா எங்கியாச்சும் டூரு போணுமுனு ஆசதான்... இந்தப் பயலும் புடுங்குறான்... துட்டு வோணாமாமா?
இப்படி சேத்துவச்ச ஆசையெல்லாம் தான் கனவுல வருமாம். சிமரிபாவுக்கு மானசரோவர் போன கனவு வந்திருக்கே...
கெனவுலயாவது நெறவேறுதே.... இப்படிக் கல்யாணக் கெனவோட சந்தோசமா இருந்தவரோட கல்யாணம் நின்னுபோனா அவரு மனசு என்னா பாடுபடும்... ஜார்ஜ் கதையில என்னமா சொல்லினுக்காரு....
இதுவும் கடந்துபோகும்னு மனசைத் தேத்திக்கவேண்டியதுதான். நிவாஸும் இப்படிதான் சலனப்படுத்திய சில தருணங்களைத் தவிர்க்க விரும்பறார். தவிர்க்க முடிஞ்சிதா என்னன்னு தெரியலை.
எப்புடி முடியும்? காதலுதான் கண்ணக்கட்டிப்பூடுதே... திவ்யாவுக்கு வாயையும் கட்டிப்பூட்டுதாமே...?
அதாண்டி காதல்... ஆனா... ஜெகதீசன் ஐயா ஊருக்குப் போனாலும் போனார்.... காதல் கவிதைகள் பக்கம் ஒரே வறட்சிதான்.
இந்த வயசிலயும் இன்னா ஜோரா காதல் கவிதைங்கோ பாடுறாரு....
காதலுக்கு ஏதுடி வயசு? ரங்கராஜன் எழுதின made for each other கிற திரியைப் படிக்கலையா? வயசான காலத்தில் அந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கிற அன்னியோன்னியத்தையும் அந்திமப் பொழுதுகளையும் கண்கூடாப் பார்க்கிற பாக்கியம் அவருக்குக் கிடைச்சிருக்கே... படிக்கிற நமக்கே மனசைப் பிசையுதே... பார்த்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?
எத்தினி வயசானா இன்னா? ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற பாசம் எப்புடி கொறையும்? வயசான கலத்துல தேவரையா பாசம் வெச்சினுருந்த கருப்பு ஊருக்காக தன் உசிரையே வுட்டுடுச்சே...
இந்தக் கதையை ரவீதானே எழுதியிருக்கார்?
ஆமா...அதே மாதிரி பாசம் வெச்சினு இருந்த புள்ள ராகுலு சிரிச்ச சிரிப்பால அதோட கெடா பலியாப்பூடுச்சின்னு ஆத்தா சம்மதம்னு சிவாஜி எழுதிக் கெலங்கடிச்சிட்டாரே...மாடன சந்தக்கி இட்டாந்துட்டு அந்தக் குட்டிப்பய மாணிக்கம் சொல்லுற கத கண்ணுல தண்ணி வரவக்கிது... டெல்லாஸு எய்தினுகீறாரு.......
சின்னப்பசங்க ஆசை ஆசையா வளர்த்த பிராணிகளை அவங்ககிட்டயிருந்து பிரிச்சாலே அவங்களோட பிஞ்சுநெஞ்சம் தாங்காது....அதிலயும் தனக்காகத்தான்னு சொல்லி தன் கண் முன்னாடியே பலிபோட்டா எந்தக் குழந்தையாலதான் தாங்கமுடியும்? பாபுவோட நிலையை நினைச்சுப் பாக்கவே முடியலை... சுரேஷ் எழுதினது இது .
அதுக்கே அப்புடி சொல்றியே... முத்துராசுவுக்கு அவன் செல்லக் கெடா கருப்பையே சூப்பு வெச்சிக்குடுத்தா அதும்மனசு படுற பாட்ட இன்னான்னு சொல்றது? நிவாஸ் அப்படியே மனசத் தொட்டுட்டாரு....
அகிம்சையை பேசுறோம், படிக்கிறோம், யாரு அதுப்படி நடக்கிறா? தெருநாய்களைக் கூட விட்டுவைக்காம தங்களோட சுயநலத்துக்காகக் கொல்ற மனுஷங்களும் இந்த உலகத்துலதான் இருக்காங்கன்னு சுரேஷ் எழுதியிருக்கரே...
நானும் எங்க கொலசாமிக்கு படையலுக்கு நேர்ந்துனு கெடா வெட்டுறது பயக்கம்தான். இந்தக் கதைங்கள பாக்க சொல்லோ.... எனுக்கே பாவமா கீதும்மா.... இன்னாத்துக்கு அப்புடி செய்யுறோம்... அல்லாம் நாம் துன்னத்தானேன்னு அல்பமா கீதும்மா... கோயிலுக்கு போனா சாமி கும்புட்டோமா வந்தோமான்னு இருக்கோணும்... பலியெல்லாம் கொடுக்கத்தாவலன்னு நெனைக்கவெக்கிது...
நீ கோவிலுக்குப் போய் சாமி கும்புடுறதைப் பத்திப் பேசுற...ஆனா... கோவிலுக்குப் போயும் கடவுள்கிட்ட எதை வேண்டப் போனோமோ அதை மறந்திட்டு சக்திமான் நினைப்பிலயும், பிரியாணி நினைப்பிலயும் இருந்த குழந்தைகளைப் பத்தி ஆளுங்க கதை எழுதியிருக்காரே....
கொயந்தைங்கதானம்மா.... அல்லாம் பெருசானா தானா சரியாப்பூடும்.
கடவுளை கால் செருப்பா நினைக்கிறேன்னு ரவீ சொன்னா நீ என்னன்னு நினைப்பே....?
அடக்கடவுளே... நல்லாத்தானே இருந்தாரு.... இன்னாத்துக்கு ராங்காப் பேசினிகீறாரு....?
ராங்கெல்லாம் ஒண்ணும் இல்ல.. முழுசா படிச்சா உனக்குப் புரியும்...
அட... ஆமாம்... நான் தான் ராங்கா நெனச்சிட்டேன்... அல்லா கோயிலும் நமக்கு ஒண்ணுதாம்மா... எம்மவனுக்கு மொத மொட்ட நாகூர்லதான் போட்டது... என்னவோ எங்கூட்டுக்காரு வயில அத்தான் பயக்கமாம். ரெண்டாவது கொலசாமிக்கி... தோ... மூணாவது வேளாங்கண்ணி.... நாங்க அதெல்லாம் பாக்குறதில்லம்மா...
எறும்புளும் துரும்புளும் தளும்பும் இறைமை
சிறும்பெரும் கருதாமல் வணங்கு.
மனிதமே மதமாகும் உயிரெலாம்நம் சாதியாகும்
சமரசம் செம்மையுறச் செய்.
இறங்கட்டும் கடவுள் மனிதனுக்குள் நிரம்பட்டும்
இரங்கட்டும் எல்லா உயிர்க்கும்.
எத்தனை அற்புதமா நாகரா ஐயா சொல்லியிருக்கார் பார். உன்னை மாதிரி எல்லாரும் இருந்தாதான் பிரச்சனையே இல்லையே.... கோவிலில மட்டும்தான் சாமின்னு இல்ல.... எல்லா இடத்திலயும் கடவுள் இருக்கார்னு ஜானகி அம்மா எடுத்துப் பதிக்கிற திருமந்திர விளக்கத்தில் தாமரை அழகாச் சொல்லியிருக்கார்.
காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுல் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றான் அன்றே.
கடவுள் எல்லா இடத்திலயும் இருக்காருன்னு விளக்கம் சொல்லியிருக்கார். அது மட்டுமில்ல.... நம்மால் செய்யமுடிகிற உதவியை மத்தவங்களுக்குச் செய்தாலே போதுமாம், கடவுளை அடைஞ்சிடலாமாம்.
யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
கடவுளை அடைய மிகவும் எளிய வழி இதானாம்.
இதெல்லாம் நீ சொல்றதால தெரியிது.... இல்லனா... இந்த மரமண்டைக்கு எங்க புரியப்போவுது...?
மனுஷங்களை மரம்னு திட்டுறது தப்புன்னு குணமதி சொல்றார் தெரியுமா?
அய்யே.... அதுல இன்னா தப்பு? மரம் மாதிரி நின்னுகிறான்.... மரம் மாதிரி ஃபீலிங்ஸே இல்லாம கீறான்னு சொன்னா தப்பாமா?
மரமும் உணர்வுடைத்து மாந்தரை வைய
மரமென் றுரைப்பதுவும் மாசு.
மரத்துக்கும் உயிர் இருக்கு... உணர்வுகள் இருக்குன்னு சொல்றார்... இனிமே உன்னை மரமண்டைன்னு சொல்லிக்காதே... என்னாடி..?
சர்தாம்மா... படிச்சவுங்கோ பதவிசா சொல்லிப்பூடுறாங்கோ... படிக்காத நானெல்லம் வேஸ்டுதாம்மா....
படிச்சா மட்டும் போதுமா? பண்பு வேணாமா?
இன்னாமா பலய படத்து டைட்டில சொல்றே?
உண்மைதாண்டி.... பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு வாத்தியாரே மாணவிகள்கிட்ட வழிஞ்சா அவரை என்னன்னு சொல்றது?
ம்? ஜொள்ளு வாத்தின்னுதான் சொல்லோணும்...
அட... இப்படிதான் ஜெகதீசன் ஐயா அந்த வாத்தியாருக்குப் பேர் வச்சிருக்கார்... நீயும் சரியா சொல்லிட்டியே... லொள்ளுதாண்டி உனக்கும்....
லொள்ளுவாத்திக்கு இல்லாத லொள்ளா.... ஆமா... லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்னு படம் எடுத்துனுருந்தாரே.... எப்புடிக்கீது?
ஜோராக் கீது....ச்சீ.... உன்கிட்ட இன்னும் கொஞ்சநேரம் பேசினா உன்னை மிஞ்சிடுவேன் போல இருக்கு.... வேலைதான் முடிஞ்சுபோச்சில்ல.... கெளம்பும்மா தாயே.....
அட.... இன்னாமா... இன்னைக்கிதான் கொஞ்ச டைம் கெடச்சிது... உன்னாண்ட பேசி நாலு மேட்டரு தெரிஞ்சிக்கலாம்னா தெரத்தினுகீறியே....
அப்ப சரி...உக்காரு...
Last edited: