பாரதி..
முண்டாசு பாரதிக்கு ரெளத்திரம்
மன்றத்து பாரதிக்கு இலக்கியத்தரம்
கவியரசு வைரமுத்துவின் முகச்சாயல்... அவரது எழுத்துக்களைப் போன்றே மண்வாசனை தெறிக்கும் அனுபவக் கதைகள்.. அந்த மண்ணுக்குள் நம்மை நுழைத்து கணிணி வழி வாசம் தெளிக்கும் அவரது கதைகள்.
பின்னூட்டங்களைக் கூட அவ்வளவாக வீண்படுத்தமாட்டார், சேதப்படுத்த மாட்டார். ஒருவரது புற அடையாளங்கள் எளிமையாக இருப்பதைக் காட்டிலும் அகம் புறம் இரண்டுமே எளிமையாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டவர் யார் என்று கேட்டால் பாரதியண்ணாவை மட்டுமே சொல்லுவேன். இவரோடு பேசும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனித்து ஆராய்ந்து பேசாவிடில் அந்த வார்த்தைகளை அப்படியே மடித்து நம்மிடம் கலாய்ப்பார்...
அவர் இதழாசிரியராக இருந்த போது, வடிவமைப்பாளராக இருந்த எனக்குப் பலவகையிலும் சுதந்திரம் அளித்தார்... அவரது தலைமை மிகச்சிறப்பாக இருந்தது. தாமரை அண்ணா இங்கே குறிப்பிட்டிருப்பது போல, வேலை வாங்கும் உத்தியை நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்.
ஒரு விசயத்தைப் பற்றி ஆராய்ந்தால் முழுமையாக தெரியும் வரைக்கும் ஓயமாட்டார்.. அதை நான் கவனித்துள்ளேன். இந்தமுறை இந்தியா வந்தபோது பலமுறை என்னைத் தொடர்பு கொண்டார். பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துகொண்டோம்...
பாரதி - முண்டாசு கவிஞனைப் போன்றே இவரையும் மதிக்கிறேன்.