இதயம்

Profile posts Latest activity Postings About

  • அன்பு இதயம்,

    மீண்டும் ஒவ்வொரு நாளும் மன்றில் மலரும் நாள் வரட்டும்...
    இதயம்.. மெகாஜாஃபர்

    மிக வெளிப்படையான மனிதர். தட்டச்சு செய்ய இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பதே வியக்கும் விசயம். மன்றத்தில் குறைந்த பதிவுகளில் அதிக எழுத்துக்கள் எழுதியவர்களில் இவர் ஒருவர்தான் என் கண்ணுக்குத் தெரிகிறார்..

    நல்ல கவிஞர், கவிதாரசிகர், மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர், விவாத அரங்குகளில் மிக முதன்மையானவர், எழுத்துக்களையும் கருத்துக்களையும் அங்குலம் அங்குலமாக விமர்சித்து எழுதும் பண்பாளர்,

    இதயம் போன்றவர்கள் பேசினால் அப்பேச்சுக்களில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணரலாம். எந்த தட்டிலும் இறங்கி ஏறி பேசக்கூடிய இவரது திறமை கண்டு மிகவும் வியந்துள்ளேன்.

    சமீப காலமாக பதிவுகள் ஏதும் இல்லாவிடினும், முந்தைய பதிவுகளின் தாக்கம் இன்னமும் இருப்பதென்னவோ உண்மைதான்... விரைவில் பணிப்பளு தீர்ந்து மன்றம் வருவாராக..
    மேலே சொல்லியவர்களின் கூற்றை அப்படியே ஆமோதிக்கிறேன். இணையத்தில் நான் கண்டெடுத்த நல்முத்தகளுள் நம் இதயமும் ஒருவர்.
    இதயம்......

    இவரை ஆரம்பத்தில் எனக்கு பிடிக்கவில்லை! இவரது சில கோக்குமாக்கான பதிவுகளால் நான் கொஞ்சம் எரிச்சலடைந்திருந்தது உண்மை " என்னடா எனக்கு போட்டியாய் வந்துட்டாரே" என்று.. ஹா ஹா

    ஆனால் அவரது உறுதியான பதிவுகளால் பின்னர் நான் அவர் ரசிகனாகிவிட்டேன்.....

    இப்போது என் இதயத்தில் இவருக்கும் இடம் உண்டு!
    வலிமையான கோடாயுததத்திற்குச் சொந்தக்காரர்.

    (கோடாயுதம் அதான் கோடால் ஆக்கப் படும் எழுத்துரு).

    சொல்ல நினைத்ததை, சொன்னதை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனோபாவம். இதுதான் இதயத்திடம் என்னை அதிகமாக நெருங்க வைத்தது. வந்த சில நாட்களிலேயே உள்ளம் கொள்ளை கொண்ட இதயம். சத்தியத்தின்பால் மட்டுமே இதயத்தை வைத்திருக்கும் ஒரு அன்பு உள்ளம். சிறுமை கண்டு பொங்குவாய் எனச் சொன்ன பாரதியின் வார்த்தைக்கு உதாரண புருஷன். வேகத்தோடு கூடிய விவேக சிந்தாமணி என் இதயம். வாழ்க பல்லாண்டு
    தன் எழுத்து வன்மையால் அனைவரது இதயங்களையும் திருடி தன் பெயரிலேயே அடக்கி வைத்திருக்கிறார். அவர் எழுத்துக்கு நான் ஒரு விசிறி......
    படைப்புகளை விட சில சமயங்களில் இவரது பின்னூட்டம் தரம் மிக்கவையாக அமைந்து விடுகிறது. தெளிவாக அதேபுறத்தில் நச்சென்று கருத்துக்களை இறக்குவதில் வித்கர். எனது பாசமிக அண்ணார்.
    நல்ல எழுத்தாளர்.... எப்படி பக்கம் பக்கமாய் எழுதி கலக்குகிறார் என இதயத்தை கண்டு வியந்துள்ளேன்.

    எடுத்த முடிவில் மாற்றம் தெரிவிக்காமல் தொடர்பவர். விவாதங்களில் இவர் பங்கு பெரிது.
    சுத்தமான இதயம்.
    அன்பு, அறிவு, ஆரோக்கியம் அனைத்தும் தர வல்லது இவரது பழக்கம்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top