Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • இளசு!!

    பெயர் கேட்கும்போதெல்லாம் துடிதுடிக்கும் ஒவ்வொரு செல்களும்.. கவிஞனின் மனத்துளைகளில் சஞ்சரிக்கும் எழுத்துக்கள் இவருடையது. அருமையான கவிஞர், விமர்சகர்,

    இளசு வாசித்தால் அப்படைப்பு ஓரளவு நன்கு எழுதப்பட்டிருக்கிறது எனலாம். இளசு வாசித்து பின்னூட்டமிட்டால், அப்படைப்பு மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது எனலாம். படைப்புகள் ஒவ்வொன்றும் இளசுவின் வாசிப்புக்காகவேனும் ஒவ்வொரு நாழிகையும் காத்திருக்கும்.

    இன்னொரு இளசு?

    பூமிக்கு ஒன்றுதான் சூரியன்.
    முகம் அறியாது,
    குரல் கேட்டறியாது,
    ஆனால் உணர்வுகள் மட்டும்
    உறவாடுகின்றன ஏன்?

    நான் சந்திக்க நினைத்துள்ள
    மனிதரில் இவரும் ஒருவர்,
    இளசு ,எனது இளவல்.
    அன்பு நண்பர் இளசுவும் எனது ஆரம்பகால மன்ற நண்பர்களில் ஒருவர்....

    எப்படி இவர் இப்படி எழுதுகின்றார் என்று வியந்துள்ளேன்.....

    பல நல்ல பதிவுகளின் சொந்தக்காரர், மன்றத்தின் அச்சாணி.

    அன்பிலும் பண்பிலும் இவருக்கு நிகர் இவரே......
    ஒரு சிலரால் மட்டுமே அனைவரையும் வசீகரிக்கமுடியும்... அப்படியே வசீகரித்தாலும் மிக சிலரால் மட்டுமே அனைவர் அன்பையும் பெறமுடியும்.. அப்படிபட்ட சிலரில் மிக சிறப்பானவர் இளசு.
    இவர் விமர்சணங்களை எதிர்பாத்து ஒவ்வொருபடைப்புகளும் ஏங்கும்...
    கோடியில் ஒருவர்...
    எனக்கு தெரிந்து இவர் மட்டும்.
    அன்பில் அள்ள, அள்ளக் குறையா அட்சயப்பாத்திரம். குணத்தில் சுத்தத்தங்கம். யாரையும் தன் எழுத்தால் வசீகரித்து விடும் எழுத்தாற்றல். உள்ளொன்று வைத்து பேசா உத்தமர்.! மருத்துவத்தை உடலுக்கும், மனதுக்கும் மற்றவர்க்கு அளிக்கும் மருத்துவ மாணிக்கம்.! என் பேரன்பிற்கும், மதிப்பிற்குமுரிய மூத்த அண்ணன்..!!
    மணியா சொன்னதைப்போல உண்மையிலேயே ஒரு அதிசயப்பிறவி எங்கள் இளசு. என்ன இல்லை இவரிடத்தில்? ஆழ்ந்த தமிழறிவு, விஞ்ஞான, மெய்ஞான அறிவுடன், வாசிப்பவரையெல்லாம் வசியம் செய்யும் தேனெழுத்துக்குச் சொந்தக்காரர். இவரின் பின்னூட்டமென்பதை, படைப்புக்கு கிடைத்த உச்சக்கட்ட அங்கீகரிப்பாக நினைக்க வைக்கும் அன்பு மனசுக்காரர். என் நன்பர் என சொல்லிக்கொள்வதில் இமாலய மகிழ்ச்சி. வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டுமென தவிக்க வைப்பவர்.
    ஒரு அதிசய பிறவி.......என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மனிதர்....எதிலும் ஒரு தீர்க்கமான பார்வை அணுகுமுறை....அப்பப்பா.....சுட சுட பதில்கள்......மொத்தத்தில் ஒரு வியத்தகு மனிதர்....அவருடன் சகவாசம் கொண்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.....
    வியக்கவைக்கும் மன்ற வித்தகர்களில் முதல்வர்... கடலை போல தன்னிலை மாறாமல் எப்போதும் எல்லோரிடம் அன்பு காட்டும் அண்ணல்..!!
    எல்லோரும் குறைந்தபட்சம் எதுவித பிணக்குகள் இன்றி இருக்கவேண்டும் என்று விரும்புபவர். ஒருவகையில் சமாதனத் தூதுவரும் கூட. இவ்வளவேனும் என்னை வளப்படுத்த அச்சுகளாக இருந்தவர்களில் முதன்மையானவர்.
    தென்னையின் சுவை இளநீ்ரில். முதுநீராய் அருந்தும் போதும் உவகை அளிக்கும் சுவைப் பொருள். பெயரில் இளவலாகக் காட்டிக் கொண்டாலும் தென்னையின் முதுநீருக்கு ஒப்பான பயனளிக்கும் ஒப்பற்ற அறிவு ஜீவி. மன்றத்து மக்களுக்கு அன்பின் இரகசியத்தை அறிவிக்கும் அனுபவ முத்திரை கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரர். பாசமிகு தம்பியாக என்றும் என்உள்ளத்தைக் கொண்ட நல்லிதயத்திற்கு உரிமைக் காரர். இளசு, உச்சரிக்கும் போதே வார்த்தையின் வழுக்கல் அவர் கொண்ட மெல்லிதயத்தின் சாயல்.
    சிறந்த விமர்சகர்.. இவருடைய விமர்சனங்களில் ஊளைச் சதைகளை நீங்கள் காணவே முடியாது. என்ன சொல்ல வருகிறார் என்பதை மிகத் தெளிவாக மண்டையில் ஏற்றிவிடும் இவரின் மென்மையான வார்த்தைகள். மன்றம் பெற்ற மாபெரும் சொத்து.. பல திறமையாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் வித்து!
    மன்றத்துள், நான் உருவகப்படுத்தி வைத்துள்ள பிரமாண்டம். பின்னூட்டங்களிலும் அன்பிலும் என்னுள் ஓர் தனியிடம் பெற்றவர்.
    இளசு
    அன்புக்கும் உரிய அருமை நண்பர். தங்கள் ஆதறவுக்கு நன்றி
    அன்பால் அரவணைத்து தட்டிக்கொடுக்கும் உறவுகளில் ஒருவர்... சுருங்கச்சொல்கிறேன்.. மன்றத்தின் சாரதி எனலாம்....
    பெயர் தெரியாது ஊர் தெரியாது வயது தெரியாது இன்ன பிற எதுவுமே தெரியாது. அனால் இவர் எனது பெரியண்ணா... (ஏன்னா அண்ணாவுக்கும் அண்ணா :) ) :).
    கவலைகள் வாட்டி மனம் கலங்கி நடை தளரும் போது உரிமையோடு உள்ளச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு இவரது கரங்களிலிருந்து வரும் குளிர்நீர் பருகி விட்டு. துணிவுடன் நடைபோட்டுச் செல்வேன். பாசமிகு பாரதி அண்ணாவிற்கே அண்ணா என்றால் இவரது பாசத்திற்கும் ஒப்புமை இருக்கிறதா?
    தமிழ் மன்றத்தில் கிடைத்த தவப்புதல்வன்.
    சிலர் எழுத்துக்களால் புரட்சியை ஏற்படுத்தினார்கள் என்பதை கேள்விப்படிருக்கிறோம்.
    இவருடைய எழுத்துக்களில் அதை உணர்ந்தேன். ஆம்.. அது அன்பு புரட்சி.
    அவரது எழுத்துக்களில் பண்பும் பாசமும் ஒளிவீசும்.
    மிகவும் வியக்க வைக்கும் மனிதர்
    அனைத்து உறவுகளையும் அகத்தில் கொண்டவன் மனிதன்.
    அனைத்து உயிர்களிலும் அன்பு கொண்டவன் மன்னன்-இவை
    அனைத்தும் உறைந்த மனமாளும் மன்னவன் இளசு அண்ணன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top